பக்கம் எண் :

6தொல்காப்பியம் - உரைவளம்
 

தொய்யென விறைஞ்சியோளே மாவின்
மடங்கொண் மதைஇய நோக்கி
னொடுங் கீரோதி மாஅயோளே”.
1

(அகம். 86)
 

இதனுள்,     வதுவைக்கு  ஏற்ற  கரணங்கள்  நிகழ்ந்தவாறும் தமர் கொடுத்த வாறுங் காண்க. சுற்றஞ்
சூழ்ந்து   நிற்றலானும்   தமர்   அறிய   மணவறைச்    சேறலானும்  களவாற்  சுருங்கி  நின்ற  நாண்
சிதைந்தமையைப்  பின்னர்த்  தலைவன் வினவ அவண் மறுமொழி  கொடாது  நின்றமையைத் தலைவன்
தோழிக்குக் கூறியவாறு காண்க. இதனானே இது களவின் வழி நிகழ்ந்த கற்பாயிற்று.
  

சிவலிங்கனார்
  

இச்சூத்திரம் கற்பொழுக்கமாவது யாது என்பது உணர்த்துகின்றது.


1. பொருள்: உளுந்து  பெய்துசமைத்த  பொங்கலாகிய  உணவுக்  குவியல்  பலராலும்  உண்ணப்பட,
வரிசையாகக் கால்களமைத்துப் போடப்பட்ட பந்தரில் புதுமணல் பரப்பி, விளக்கேற்றி, தோரணங்கள்
தொங்கவிட்டு,    விடியற்காலையில்   தீயகோள்களை   நீங்கிய   திங்களை   உரோகணி   நாள்
கூடியநேரம்   வந்ததாக,  தலையில்   குடம்   தாங்கியவரும்   கையில்  மண்டை  எனும்   கலம்
கொண்டவருமாகிய திருமணச் சடங்குகளைச்  செய்யும்  முதியபெண்டிர்கள்  மங்கலப்  பொருள்கள்
முன்னும் பின்னுமாகத் தரத் தர, புதல்வர்  பெற்ற மகளிர்   நால்வர்  கூடி  மணமகளை  நோக்கிக்
கற்பொழுக்கத்துவழாமல்  நல்ல  மனையறங்களைச்  செய்து   கணவன்  விரும்பும்  பெண்  ஆகுக
எனக் கூறி நீருடன் அலர்களையும் நெல்லையும் தூவி வாழ்த்த அவை மணமகள் கூந்தலில் விளங்க
இப்படித்   திருமண   நிகழ்ச்சி   கழிந்த  பின்னர்    சுற்றத்தார்  சிலர்   திடீரென   வந்து   நீ
மனைக்கிழத்தியாவாயாக  எனச்   சொல்லி  என்னுடன்  கூட்டத்  தனி  அறையில்  புணர்தற்குரிய
இரவிலே,  அவள்  முதுகு புறத்தை வளைத்து ஆடைக்குள்  மறைந்த  அவள்  உடம்பைத்  தழுவி
புணரும் விருப்பத்தால் அவள் முகத்தை மூடியிருந்த கைகளை அகற்றியபோது, மாயோளாகிய அவள்
அஞ்சியவளாய் பெருமூச் செறிய, யான் உன் மனதில் உள்ளதை மறையாது உரை என்று கூற, அவள்
மனமகிழ்ந்தவளாய் ஒய்யென நாணித் தலை கவிழ்ந்தாள்.