என ஆற்றாமை மிகுதியாற் சென்றமை கூறியவாறு காண்க. |
கைவிடின் அச்சமும்-தலைவிதான் உணர்த்தவும் உணராமல் தன்னைக் கைவிட்டுப் பிரியில் தான் அவளை நீங்குதற்கு அஞ்சிய அச்சத்தின் கண்ணும், தலைவற்குக் கூற்று நிகழும். |
அஃது, உணர்ப்புவயின் வாராவூடலாம். |
“எவ்வி யிழந்த வறுமையாழ்ப்பாணர் பூவில் வறுந்தலை போலப் புல்லென் றினை மதிவாழிய நெஞ்சேமனைமரத் தெல்லுறு மௌவனாறும் பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே”1 |
(குறுந்-19) |
இதனுள் அவளையின்றி வருந்துகின்ற நெஞ்சே அவள் நமக்கு யாரெனப் புலத்தலன்றி ஆண்டு நின்றும் பெயர்தல் கூறாமையிற் கைவிடின் அச்சமாயிற்று. |
தான் அவட் பிழைத்த நிலையின் கண்ணும்-தலைவன் தலைவியைப் பிழைத்த பிரிவின் கண்ணும். |
‘பிழைத்த’ என்றார் ஆசிரியர், இயற்கைப் புணர்ச்சி தொடங்கிப் பலகாலும் பிரியேனெனத் தெளிவித்ததனைத் தப்பலின். |
உதாரணம் |
“அன்பு மடனுஞ் சாயலு மியல்பு மென்பு நெகிழ்க்குங் கிளவியும்பிறவு மொன்றுபடு கொள்கையொடொராங்கு முயங்கி யின்றே யிவணமாகி நாளைப் |
செல்க என்றாள். அது கேட்ட தலைவன், இருதலை ஓருயிர்ப்புள்ளின் ஒரு தலையானது மற்றைத் தலையொடு போர் செய்தல் போல நீ என்னைப் புலந்து பேசுதலாற் பயன் என்? அது விட்டு என் அரிய உயிர் நிற்கும் வழியைக் கூறுக என்றான். |
1. பொருள் : மனைத் தோட்டத்து மரத்தில் படரும் முல்லை மலர்போல நறுமணம் கமழும் இக் கூந்தலுடையாள் நமக்கு என்ன உறவுடையவள்; யாரோ ஏதிலாள் ஆவள். அதனால் எவ்வி என்பவனை யிழந்ததனால் வறுமையுற்ற யாழ்ப்பாணர் தலைகள் பொற்பூக்களைச் சூடாமையால் புல்லென்றது போல நெஞ்சே நீ வருந்துக. வாழி. |