“ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந் துள்ளியுமறிதிரோ வெம்மென யாழநின் முள்ளெயிற்றுத் துவர்வாய் முறுவலழுங்க நோய்முந் துறுத்து நொதுமலமொழியனின் னாய்நல மறப்பெனோ மற்றே சேணிகந் தொழிகழை மிசைந்த ஞெலிசொரி யொண்பொறி படுஞெமல் புதையப் பொத்தி நெடுநிலை முளிபுன் மீமிசைவளி சுழற்றுறாஅக் காடுகவர் பெருந்தீ யோடுவயினோடலி னதர் கெடுத்தலறிய சாத்தொ டொராங்கு மதர்புலி வெரீஇயமையல் வேழத் தினந்தலை மயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு ஞான்றுதோன் றவிர்சுடர் மான்றாற் பட்டெனக் கட்பட ரோதி நிற்படர்ந் துள்ளி யருஞ் செலவாற்றா வாரிடை ஞெரேரெனப் பரந்துப டுபாய னவ்விபட்டென விலங்குவளை செறியா விகுத்த நோக்கமொடு நிலங்கிளை நினைவினை நின்ற நிற்கண் டின்னகை யினையமாகவு மெம்வயி னூடல் யாங்கு வந்தன்றெனயாழநின் கோடேந்து புருவமொடு குவவுநுதனீவி நறுங்கதுப்புளரிய நன்ன ரமயத்து வறுங்கை காட்டிய வாயல்கனவி னேற்றேக் கற்ற வுலமரல் போற்றா யாகலிற் புலத்தியா லெம்மே”1 |