பக்கம் எண் :

78தொல்காப்பியம் - உரைவளம்
 

எனவரும்.
  

நிறுத்தற் கண்ணும்  என்பது-தலைவனது  பண்பினைத்தோழி  கூறியவாற்றால்  தான் நிறுத்துக் 
கூறுதற் கண்ணும் என்றவாறு.
  

உதாரணம்
  

“முடவுமுதிர் பலவின் குடமருள் பெரும்பழம்
பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்
பாடிமிழருவிப் பாறைமருங்கின்
ஆடுமயில் முன்னதாகக் கோடியர்
விழவுக்கொள் மூதூர் விறலி பின்றை
முழவன் போல அகப்படத் தழீஇ
இன்துணைப் பயிருங் குன்றநாடன்
குடிநன் குடையன் கூடுநர்ப் பிரியலன்
கெடுநா மொழியலன் அன்பினன் எனநீ
வல்லகூறி வாய்வதிற் புணர்த்தோய்
நல்லை காணில் காதலந்தோழி
கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி
நல்லிசை நிறுத்த நயவரும் பனுவல்
தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகள்
எண்ணுமுறை நிறுத்த பண்ணின்உள்ளும்
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே.”
1
  

(அகம்-352)
 

என வரும்.  


தேன்போல     உயர்ந்ததாகும். நீரை இன்றியமையாத உலகம் போலத் தம்மையின்றியமையாத 
நம்மை நயந்து  தாம்பிரிதலால்  என்நுதல்  பசலையுறுதற்கு   அஞ்சிச்   செய்வதறியாத அவர் 
சிறுமை (பிரிதல்) அடைவரோ? மாட்டார்.
  

1. பொருள் : ஆடும்  விறலிக்குப்  பின் நிற்கும்  முழவு  வாசிக்கும்  கோடியர்போல  ஆடுமயில் 
முன்நிற்கப்  பாறைப்   பக்கமாகப்   பலாப்பழத்தைத்   தழுவியவண்ணம்  ஆண்  குரங்கானது 
நின்று தன் பிணையை அழைக்கும்  படியான  குன்றத்துக்குரிய  தலைவன், நற்குடிப்  பிறந்தவன், கூடியவரைப் பிரியாதவன், கெடுமொழி கூறாதவன், அன்புடையவன் எனத் தோழி! நீ நல்லன கூறி அவனை என்னோடு சேர்த்தாய். நீ  நல்லவளே.  அஞ்சி  என்பானின் புகழ் அமைந்த  பாடலில் 
பாண்மகள்  அமைத்த பண்ணைக் காட்டினும், அவள் புதியதாக அமைத்த  திறத்தைக் காட்டினும், 
எம் திருமணநாளைக் காட்டினும் இன்று எனக்கு இனியனாவான்.