எனவரும்.1 |
வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇக் கிழவோள் செப்பல் கிழவதென்ப என்பது-வாயில்கள் மாட்டு வரூஉங் கூற்று வகையுளப்படத் தலைவி கூற்று நிகழும் என்றவாறு. |
வாயில்களாவார்:- பார்ப்பார், பாங்கன், தோழி, செவிலி, பாணன், விறலி, இளையர், விருந்தினர், கூத்தர், அறிவர், கண்டோர். |
இவருள் தோழி வாயிலாதல் மேற்கூறுதலின் ஒழிந்த வாயில்கள் ஈண்டுக் கொள்ளப்படும். |
“அன்னாய் இவனோர் இளமாணாக்கன் தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ இரந்தூண் நிரம்பா மேனியொடு விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே.”2 |
(குறுந்-33) |
இது பாணன் வாயிலாக வந்துழிக் கூறியது. |
“நீகண்டனையோ கண்டோர்க் கேட்டனையோ ஒன்று தெளிய நகையின மொழிமோ வெண்கோட்டியானை சோணை படியும் பொன்மலிபாடலி பெறீஇயர் யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.”3 |
(குறுந்-75) |
இது வருகின்றான் என்ற உழையர்க்குக் கூறியது. |
|
பறையினை மாலைக் காலத்து நிலவு வெளிப்படவும் கைவிடாமல் தன் பாட்டுக் கிடந்து உறங்குகின்ற தன் புதல்வனைக் கண்ட அளவிலே தனது பரத்தையரின் மணமனையினை நினையாதவனாய்த் தங்கினான். |
1. என வரும் என்பதை என இப்படியும் வரும் எனக்கொள்க. |
2. பொருள் : அன்னாய் (தோழீ) இப்பாணன் வயது குறைந்த மாணாக்கன் போல்வான். இரந்துண்ணுதலால் நிரம்பாத உடம்புடனே தனக்குப்(புதிய) வேற்றூராகிய இவ்வூரிடத்துப் பெரிய தலைமையுடையான் போல் பேசுகின்றான். இவன்தன் ஊர்ப் பொதுமன்றத்து எப்படிப்பட்டவனாய் இருப்பானோ! |
3. பொருள் : பாணனே! எம் காதலர் வரவை நீ நேரிற் கண்டாயோ? அல்லது பிறர்கூறக் கேட்டாயோ? பிறர் கூறக் கேட்டாயாயின் யார் வாய்க் கேட்டாய்? யானை சோணையாற்றிற் படிந்து நீராடும்படியான பொன்மலிந்த பாடலி என்னும் ஊரை நீ பெறுவாயாக. |