கூத்தர் பாணர் |
167. | நிலம்பெயர்ந் துரைத்தல் அவள்நிலை உரைத்தல்1 கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை யுரிய. | (28) |
பி.இ.நூ. |
நம்பியகம் 55 |
................... அவன் வயின் செல்ல விரும்பலும் சென்றவற் குணர்த்தலும் ................... பாணற் குரிய. |
இல. வி. 463 |
நம்பியகச் சூத்திரமே |
இளம் |
இது, மேற்கூறப்பட்ட கூத்தர்க்குஞ் சொல்லாத2 பாணர்க்கும் உரிய கிளவி உணர்த்திற்று. |
(இ-ள்) நிலம் பெயர்ந்துரைத்தல் என்பது - தலைவன் பிரிந்தவிடத்துச் சென்று கூறுதல். அவள்3 நிலையுரைத்தல் என்பது - அவள் நின்ற நிலையைத் தலைவற்குக் கூறுதல். |
“அருந்தவ மாற்றியானுகர்ச்சி போல்” என்னும் பாலைக் கலியுள், |
“தணியாநோய் உழந்தானாத் தகையவள் தகைபெற அணிகிளர் நெடுந்திண்தேர் அயர்மதி - பணிபுநின் காமர் கழலடி சேரா நாமஞ்சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே”4 |
(கலித்-30) |
1 வரைநிலை யுரைத்தல் - நச். பாடம். 2 சொல்லாத - இன்னின்ன கிளவிகள் உரிய என முன்னர் வரையறுத்துச் சொல்லப் பெறாத. 3 அவள் - தலைவி 4 பொருள் : தணியாத காமநோயால் உழந்து அமையாத தகுதியுடையளாகிய தலைவி நின் கழலடியைப் பணிந்து |