பக்கம் எண் :

கற்பியல் சூ.29245
 

நச்
  

இஃது,    உழைக்குறுந்தொழிற்கும்   காப்பிற்கும்   (171)   உரியராகிய  இளையோர்க்குரிய  இலக்கணங்
கூறுகின்றது.
  

இதன் பொருள் :- ஆற்றது    பண்பும் - தலைவன்   தலைவியுடனாயினுந்  தானேயாயினும்  போக்கு
ஒருப்பட்டுழி  வழிவிடற்பாலராகிய    இளையோர்  தண்ணிது  வெய்து  சேய்த்து அணித்தென்று  ஆற்றது
நிலைமை  கூறுதலும்,  கருமத்து    விளைவும்  -  ஒன்றாகச்  சென்று  வந்து செய்பொருண்  முடிக்குமாறு
அறிந்து  கூறுதலும்,  ஏவல் முடிவும்   - இன்னுழி இன்னது செய்க என்று  ஏவியக்கால்  அதனை  முடித்து
வந்தமை  கூறலும்,  வினாவும்  - தலைவன் ஏவலைத்    தாங்கேட்டலும், செப்பும் - தலைவன்  வினாவாத
வழியும்  தலைவிக்காகவாயினுஞ்  செப்பத்  தகுவன    தலைவற்கு  அறிவு  கூறுதலும்,  ஆற்றிடைக் கண்ட
பொருளும்  - செல்சுரத்துக் கண்ட நிமித்தம் முதலிய   பொருள்களைத்  தலைவற்குந்  தலைவிக்கும் உறுதி
பயக்குமாறு  கூறலும்,  இறைச்சியும்  -  ஆண்டு    மாவும்   புள்ளும்   புணர்ந்து   விளையாடுவனவற்றை
அவ்விருவர்க்குமாயினுந்  தலைவற்கேயாயினுங்    காட்டியும்  ஊறுசெய்யுங்   கோண்மாக்களை  அகற்றியுங்
கூறுவனவும்,  தோற்றஞ்சான்ற  அன்னவை    பிறவும்  -  அங்ஙனம்   அவற்குத்  தோற்றுவித்தற்கமைந்த
அவைபோல்வன  பிற  கூற்றுக்களும்    இளையோர்க்கு  உரிய  கிளவி  என்ப.   இளையோர்க்கு  உரிய
கூற்றென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
 

தலைவியது     செய்தி    அறிந்துவந்து கூறுவனவும் பிற பொருளுணர்ந்து வந்துரைப்பனவும் ஒற்றர்கண்
அடங்கும்.  ஏவன்     முடிவிற்கும்  இஃதொக்கும்.  ‘சான்ற’   வென்றதனான்  ஆற்றது  பண்பு கூறுங்கால்
இதுபொழுது   இவ்வழிச்சேறல்   அமையாதென   விலக்கலுங்     கருமங்   கூறுங்காற்   சந்து  செய்தல்
அமையுமெனக்  கூறுதலும் போல்வன அமையாவாம். அவர்   அவை கூறப் பெறாராகலின்.   பிறவாவன; -
தலைவன்  வருவனெனத்  தலைவி  மாட்டுத்  தூதாய்   வருதலும் அறிந்து சென்ற தலைவற்குத்   தலைவி
நிலை  கூறுதலும்  மீளுங்கால் விருந்து பெறுகுவள்   கொல்லெனத் தலைவி  நிலையுரைத்தலும்  போல்வன.
இலக்கியம் வந்துழிக் காண்க.
 

“விருந்தும் பெறுகுநள் போலுந் திருந்தி ழைத்
தடமென்பணைத்தோண் மடமொழியரிவை
தளிரியற் கிள்ளை யினிதினினெடுத்த
வளராப் பிள்ளைத் தூவியன்ன