மகன் தாய் உயர்பு தன்உயர்பு என்பனவற்றுக்கு நச்சினார்க்கினியர், நீயும் இம்மகனுக்குத் தாயாவாய் என இளையாளை நோக்கிக் கூறும் உயர்பு மூத்தாளாகிய தலைவியின் உயர்பாகும் என முதல் மனைவியின் செயலாகவும், மகனுக்குத் தாயாகிய மூத்தாளை உயர்த்திப் போற்றுவது இளையாளாகிய தன் உயர்பாகும் என இளைய மனைவியின் செயலாகவும் இருவகையில் உரை கூறி இரண்டும் ஏற்கும் என்பர். மணந்து கொள்ளப்பட்ட இருவரும் ஒருவரையொருவர் உயர்த்துதலினும் மணந்தமனைவி மணவாக் காமக்கிழத்தியை நீயும் மகன் தாய் என உயர்த்துதல் சிறப்பாதலின் நச்சினார்க்கினியர் சிறப்புடையதாகாது பொருந்துவதாயினும். |