காமஇழிநிலையை ஏதுக்காட்டிக்கூறுதல் என்றுகூற வெள்ளைவாரணனார் தலைவன் ஊர்ந்துவரும் தேரின் நிலையைக் கூறுதல் என்றார். தலைவனின் செலவு பற்றிக் கூறுவதுபோல வரவு பற்றியும் கூறுதல் உண்டு என்பது சிறக்கும் ஆதலின் வெள்ளை வாரணனார் கூறியது சாலப் பொருந்தும். |
வாயில்களின் கூற்று |
176. | எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும் புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப. | (37) |
|
இளம் |
இது, வாயில்கட் குள்ளதோர் மரபு உணர்த்திற்று. |
இ-ள் : வாயில்கள் எல்லாம் இருவர் மாட்டும் பொருந்திய மகிழ்ச்சிப் பொருண்மையுடைய என்றவாறு. |
இருவராவார் தலைவனுந் தலைவியும், எனவே வெகுட்சிப் பொருண்மை கூறப் பெறார் என்றவாறு, |
நச் |
இது, வாயில்களின் இலக்கணங் கூறுகின்றது. |
இ-ள்: எல்லாவாயிலும்- பார்ப்பான் முதலிய வாயில்களெல்லாம். இருவர் தேஎத்தும் புல்லிய-தலைவன் கண்ணுந்தலைவி கண்ணும் பொருந்திய, மகிழ்ச்சிப் பொருள என்ப-மனமகிழ்ச்சிப் பொருளினை நிகழ்த்துதலைத் தமக்குப் பொருளாகவுடையர் என்றவாறு , |
எனவே, மகிழ்ச்சி கூறப்பெறாராயிற்று. ‘புல்லிய’ என்றதனானே விருந்தும் புதல்வரும் ஆற்றாமையும் வாயிலாகுப என்று கொள்க. வாயில்கள் ‘தோழி தாயே’ (193) என்பதனுட் கூறுப. உதாரணம் வந்துழிக் காண்க. |
சிவ |
இச்சூத்திரம் வாயில்களின் கூற்றுக்கு உரிய குறிக்கோள் கூறுகின்றது. |
எல்லா வாயில்களும் தலைவன் தலைவியரிடையே பொருந்திய இன்பத்தையே அடிப்படைப் பொருளாகக் கொண்டு நிற்கும் என்பர். |