பக்கம் எண் :

270தொல்காப்பியம் - உரைவளம்
 

என்றவழித்  தன்னை   உயர்த்துக்   கூறுதலாற்  புகழ்ந்தாளாம்.  நின்னை  வெருவாதார்  பிறர்  என்னும்
உள்ளக் கருத்தினால்.
  

“நீயுறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றினி
யார் மேல் விளையுமோ கூறு”
1
  

(கலித்-88)
 

என்ற  வழியும்  பெண்டிர்   பல  உளராயினும்  அவர் எல்லார் மாட்டுஞ் செல்லாது தன்மேல் வருமெனக்
குறித்தாராதலின், தன்னைப் புகழ்ந்தாளாம்.
  

பிறவுமன்ன.
  

நச்.
  

இது, தலைவி யிலக்கணங் கூறுகின்றது.
  

இ-ள்:  தற்புகழ்  கிளவி  கிழவன்முற்   கிளத்தல்-தன்னைப்  புகழ்ந்துரைத்தலைக்  கிழவன் முன்னர்ச்
சொல்லுதல்,  எத்திறத்தானுங்  கிழத்திக்கு  இல்லை-நனிமிகு  சீற்றத்   துனியினும்   தலைவிக்கு  இல்லை.
முற்பட  வகுத்த  இரண்டலங்  கடையே-முன்பு   கூறுபடுத்தோதிய ‘தாய்போற்  கழறித்தழீஇக்  கோடலும்’
(173) அவன் சோர்பு காத்தற்கு ‘மகன்றாயுயர்பு’ தன்னுயர் பாதலும்’ (174) அல்லாதவிடத்து என்றவாறு.
  

கிழத்திக்  கில்லையென  முடிக்க.  அவ்விரண்டிடத்துந்  தனது  குணச் சிறப்பைக் குறிபோல் தலைவன்
முன்னே புகழ்வாள் போல ஒழுகினாளென்றுணர்க.
  

இனி     ‘முற்பட வகுத்த இரண்டு’  என்பதற்கு இரத்தலுந் தெளித்தலும் (41) என அகத்திணை யியலுட்
கூறியனவென்றுமாம்.   தலைவன்  முன்னர்   இல்லையெனவே  அவன்  முன்னரல்லாதவிடத்துப்  புகழ்தல்
பெற்றாம். அவை காமக்கிழத்தியரும் அவர்க்குப் பாங்காயினாருங் கேட்பப் புகழ்தலாம்.
  

உதாரணம்
  

“பேணுதகு சிறப்பிற் பெண்ணியல்பாயினும்
என்னோடு புரையுநள் அல்லள்

தன்னொடு புரையுநர்த் தானறிகுநளே”
2

   

எனப் பதிற்றுப்பத்தில் வந்தது.


1 பொருள்  :  நீ  செய்யும் பொய்ச் சூளுறவு வருத்தம் செய்வதானால் அது நின்பெண்டிர் பலருள்ளும்
யார் மேல் நிகழும் ; கூறுக. என் மேல் தானே நிகழும்.
  

2 பொருள்: தனக்கு ஒப்பாவாரைத் தானறியும் அவள்