என்றவழித் தன்னை உயர்த்துக் கூறுதலாற் புகழ்ந்தாளாம். நின்னை வெருவாதார் பிறர் என்னும் உள்ளக் கருத்தினால். |
“நீயுறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றினி யார் மேல் விளையுமோ கூறு”1 |
(கலித்-88) |
என்ற வழியும் பெண்டிர் பல உளராயினும் அவர் எல்லார் மாட்டுஞ் செல்லாது தன்மேல் வருமெனக் குறித்தாராதலின், தன்னைப் புகழ்ந்தாளாம். |
பிறவுமன்ன. |
நச். |
இது, தலைவி யிலக்கணங் கூறுகின்றது. |
இ-ள்: தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்தல்-தன்னைப் புகழ்ந்துரைத்தலைக் கிழவன் முன்னர்ச் சொல்லுதல், எத்திறத்தானுங் கிழத்திக்கு இல்லை-நனிமிகு சீற்றத் துனியினும் தலைவிக்கு இல்லை. முற்பட வகுத்த இரண்டலங் கடையே-முன்பு கூறுபடுத்தோதிய ‘தாய்போற் கழறித்தழீஇக் கோடலும்’ (173) அவன் சோர்பு காத்தற்கு ‘மகன்றாயுயர்பு’ தன்னுயர் பாதலும்’ (174) அல்லாதவிடத்து என்றவாறு. |
கிழத்திக் கில்லையென முடிக்க. அவ்விரண்டிடத்துந் தனது குணச் சிறப்பைக் குறிபோல் தலைவன் முன்னே புகழ்வாள் போல ஒழுகினாளென்றுணர்க. |
இனி ‘முற்பட வகுத்த இரண்டு’ என்பதற்கு இரத்தலுந் தெளித்தலும் (41) என அகத்திணை யியலுட் கூறியனவென்றுமாம். தலைவன் முன்னர் இல்லையெனவே அவன் முன்னரல்லாதவிடத்துப் புகழ்தல் பெற்றாம். அவை காமக்கிழத்தியரும் அவர்க்குப் பாங்காயினாருங் கேட்பப் புகழ்தலாம். |
உதாரணம் |
“பேணுதகு சிறப்பிற் பெண்ணியல்பாயினும் என்னோடு புரையுநள் அல்லள் தன்னொடு புரையுநர்த் தானறிகுநளே”2 |
எனப் பதிற்றுப்பத்தில் வந்தது. |
1 பொருள் : நீ செய்யும் பொய்ச் சூளுறவு வருத்தம் செய்வதானால் அது நின்பெண்டிர் பலருள்ளும் யார் மேல் நிகழும் ; கூறுக. என் மேல் தானே நிகழும். |
2 பொருள்: தனக்கு ஒப்பாவாரைத் தானறியும் அவள் |