பக்கம் எண் :

294தொல்காப்பியம் - உரைவளம்
 

(இ-ள்) : தோழி-அன்பாற் சிறந்த தோழியும்,  தாய்-அவளே போலுஞ் செவிலியும், பார்ப்பான்-அவரின்
ஆற்றலுடைய   பார்ப்பானும்,   பாங்கன்-அவரே   போலும்  பாங்கனும்,   பாணன்-பாங்குபட்டொழுகும்
பாணனும்,   பாடினி-தலைவி  மாட்டுப்  பாங்குபட்டொழுகும்   பாடினியும்,    இளையர்-என்றும்  பிரியா
இளையரும், விருந்தினர்-இருவரும் அன்பு செய்யும் விருந்தினரும்,  கூத்தர்-தலைவற்கு    இன்றியமையாக்
கூத்தரும்,    விறலியர்-தாமே   ஆடலும்   பாடலும்   நிகழ்த்தும்    விறலியரும்,    அறிவர்-முன்னே
துறவுள்ளத்தராகிய  அறிவரும்,  கண்டோர்-அவர்  துறவு கண்டு கருணை செய்யுங் கண்டோரும்,   யாத்த
சிறப்பின்  வாயில்கள்  என்ப-  இந்தத்  தலைவனுந்  தலைவியும்  பெற்ற  துறவின்   கண்ணே    மனம்
பிணிப்புண்ட சிறப்பினையுடைய வாயில்களென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

  

என்றது,     இவர்    அத்துறவிற்கு    இடையூறாகாது   முன்    செல்வர்.    தாமும்    அவரைப்
பிரிவாற்றாமையினென்பதாம்.    இதனைக்  ‘கற்புங்  காமமும்’  என்னுஞ்  (152)  சூத்திரத்து    முன்னாக
வாயில்களைத்  தொகுத்துக்  கூறிய  சூத்திரமாக    வைத்தல்  பொருத்தமுடைத்தேனும் ‘யாத்த  சிறப்பின்’
என்ற   துறவு   நோக்குதலின்   இதன்பின்  வைத்தார்.   இதற்குக்    கோப்பெருஞ்சோழன்  துறந்துழிப்
பிசிராந்தையாரும்   பொத்தியாரும்  போல்வார்  துறந்தாரென்று  கூறும்  புறச்செய்யுட்கள்  உதாரணம்
என்றவாறு.
  

வினைமுற்றிய தலைவன் வருகை
  

192.  

வினைவயிற் பிரிந்தோன் மீண்டுவரு காலை
இடைச்சுர மருங்கின் தவிர்தல் இல்லை
உள்ளம் போல உற்றுழி யுதவும்
புள்ளியற் கலிமா வுடைமை யான.

(53)

இளம்
  

இது, வினைமுற்றி மீண்ட தலைவற்குரியதோர் மரபு உணர்த்திற்று.
  

சூத்திரத்தாற் பொருள் விளங்கும்.
  

‘இடைச்சுர    மருங்கிற்றவிர்தலில்லை’   என்பது   வழியில்   இடையிற்றங்காது   இரவும்   பகலுமாக
வருமென்பது கருத்து. தங்குவானாயின் மனையாள் மாட்டு விருப்பின்றாம்.