பக்கம் எண் :

296தொல்காப்பியம் - உரைவளம்
 

களின்     பின்வையாது  ஈண்டுத்  துறவு  கூறியதன்  பின்னர்  வைத்தார். இன்ப  நுகர்ச்சியின்றி இருந்து
அதன்மேல்  இன்ப  மெய்துகின்ற   நிலையாமை  நோக்கியும்,  மேலும்   இன்பப்  பகுதியாகிய  பொருள்
கூறுகின்றதற்கு அதிகாரப்படுத்தற்குமென்றுணர்க.
  

உதாரணம்
  

*”வேந்து வினைமுடித்த காலைத்தேம் பாய்ந்
தினவண் டார்க்குந் தண்ணறும் புறவின்
வென்வே லினையரின் புறவலவன்
வள்புவவித்தூரி னல்லதை முள்ளுறின்
முந்நீர் மண்டில மாதியாற்றா
நன்னல்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர்
வாங்குசினை பொலிய வேறிப்புதல
பூங்கொடியவரைப் பொய்யதளன்ன
வுள்ளில் வயிற்ற வெள்ளை வெண்மறி
மாழ்கியன்ன தாழ்பெருஞ் செவிய
புன்றலைச் சிறாரோடுகளிமன்றுழைக்
கவையிலை யாரினிளங்குழை கறிக்குஞ்
சீறூர் பல்பிறக்கொழியமாலை
யினிது செய்தனையா லெந்தைவாழிய
பனிவார் கண்ணள் பலபுலந்துறையு
மாய்தொடி யரிவை கூந்தற்
போதுகுரலணிய வேய்தந்தோயே”
  

(அகம்-104)


* பொருள்:  எந்தையே! வேந்தன் தன் போர் வினையை முடித்த பின்னர் முல்லைநிலத்தே   வேல்வீரர்
யாவரும்  இன்பம் அடைய  நீ  பாகன்  கடிவாளத்தை  இழுத்துச் செலுத்தன் அல்லது தாற்றுக்கோல்
உறுத்தின் இவ்வுலகம்  முழுதுமே புறப்பாட்டின் தொடக்க இடமாகும். என்னும்படி விரையும் நல்லநான்
குதிரைகள்  பூட்டப்பட்ட நெடியதேரில்  கொடிஞ்சி விளங்க ஏறி, உள்ளீடற்ற அவரைத் தோல்போலும்
வயிற்றையும்  தொங்கிய  செவியையும்  உடைய  வெள்ளை ஆட்டுக்குட்டிகள் புன்தலைச் சிறுவரோடு
துள்ளி மன்றத்துள்ள  ஆத்தித்  தழையைக்  கறிக்கும்படியான  சீறூர்கள் பல   கடந்து இம் மாலைக்
காலத்தில் நீர்த்துளி  வார்ந்த  கண்ணனாய்ப்   பலவாக  வெறுத்துத்   தனித்துறையும்   தலைவியின்
கூந்தலில்மலர் சூட்டினாய். இனியதொன்றை நீ செய்தாய்; வாழ்க.