வருவான்கொல் வந்தென் வனமுலைமேல்வைகித் தருவான்கொன் மார்பணிந்த தார். (இ - ள்.) சிறுதுவலை துவற்றும் கார் என்னெஞ்சைக் கொள்ளமயக்கத்தைச் செய்யும் மாலைப்பொழுதிலே தனியேநின்றேற்கு மிகும் ஒழுக்கத்தினையுடைய நீராற் சிறந்தநாடனாகிய சோழன் இரவுப்பொழுதிடத்து வருவான்கொல்? வந்து என்னுடைய அழகிய கொங்கை மேலே தங்கித்தருவான்கொல், மார்பினணிந்த மாலையை? எ-று. (45) 234. பெருந்திணை பெய்கழற் பெருந்தகை பேணா முயக்கிவர்ந்து மல்கிருட் செல்வோள் வகையுரைத் தன்று. (இ - ள்.) இட்ட வீரக்கழலினையும் மிக்க தலைமையினையுமுடையவன் விரும்பாத புல்லுதலை வேட்டுமிக்க இருட்காலத்துப் போமவளது தன்மையைச் சொல்லியது எ-று. (வ - று.) வயங்குளைமான் றென்னன் வரையகலந்தோய இயங்கா விருளிடைச் செல்வேன் -மயங்காமை ஓடரிக் கண்ணா யுறைகழிவாண் மின்னிற்றால் 1மாட மறுகின் மழை. (இ - ள்.) விளங்கும் தலையாட்டத்தால் அழகுபெற்ற குதிரையினையுடைய பாண்டியனது வரைபோன்ற மார்பைத்தழுவ ஒருவரும் நடக்கத்தகாத செறிந்த இருளிடத்துப்போவேன் மருளாதபடி, செவ்வரி கருவரி பரந்த கண்ணினையுடையாய், உறைநீக்கின வாள்போல மின்னிற்று, மாளிகையான் மிக்கதெருவிலே மேகம் எ-று. ஆல்: அசை (46) 235. புலவிபொருளாகத்தோன்றியபாடாண்பாட்டு வில்லேர் நுதலி விறலோன் மார்பம் புல்லேம் யாமெனப் புலந்துரைத் தன்று. (இ - ள்.) விற்போன்ற நெற்றியினையுடையாள் வீரன்றன் அகலத் திடத்தைத்தழுவேம் யாமென்று ஊடிச்சொல்லியது. (வ - று.)2மலைபடு சாந்த மலர்மார்பயாநின் பலர்படி செல்வம் படியேம் - புலர்விடியல் வண்டினங்கூட் டுண்ணும் வயல்சூழ் திருநகரிற் கண்டனங் காண்டற் கினிது. (இ - ள்.) மலையகத்துண்டான சந்தனத்தையுடைய அகன்ற மார்பனே, யாங்கள் நின்னுடைய பரத்தையர்பலரும் தோயும் சம்பத்தைத் தோயேம்; பொழுது புலரும் விடியற்காலத்தே சுரும்பினங்கள் புணர்ந்து நுகரும்பழனஞ் சூழ்ந்த செல்வப்பதியிலேகண்டேம்; நோக்குதற்குஇனிதாயிருந்தது எ-று.
1. முருகு. 71; பரி. 20; 25. 2. தொல். புறத். சூ. 22, இளம், மேற். |