(இ - ள்.) விண்ணில் நடக்கு நிறைமதியிடத்து நாடோறும் காட்டிலே திரியும் முயலைக்காணாநிற்கும்; கையிடத்து ஒள்ளிய வளைகழலவும் உணரானாகி ஒளித்து வாழுங் கள்வனைக் காணாது, இந்தப்பதி எ-று. இவையிரண்டும் கைகடந்த காமத்த; இக்கூற்று இவர்க்கே உரிய; அல்லன யாவர்க்கும் உரிய. (9) 334. வெறியாட்டு தேங்கமழ் கோதை செம்ம லளிநினைந் தாங்கந் நிலைமை யாயறி யாமை வேங்கையஞ் சிலம்பற்கு வெறியா டின்று. (இ - ள்.) மணநாறு மாலையுடையாள், தலைவனது அருளைக் கருதி அவ்விடத்து அந்நிலைமையைத் தாயறியாதபடி வேங்கைமரத்தாற் பொலிந்த மலையையுடைய முருகற்குவெறிக்கூத்து ஆடியது எ-று. வ - று.1வெய்ய நெடிதுயிரா வெற்பனளிநினையா ஐய நனிநீங்க வாடினாள் - மையல் அயன்மனைப் பெண்டிரொ டன்னைசொ லஞ்சி வியன்மனையு ளாடும் வெறி . (இ - ள்.) வெவ்விதாகத் தீர்க்க 2.சுவாதம்விட்டுத் தலைவனது அருளைக் கருதித் தலைவன் வருவனோவாரானோ வென்னும் ஐயப்பாடு மிகவும் நீங்க ஆடினாள், மயக்கத்தினையுடைய அயன்மனை மகளிருடனே அன்னை சொல்லையும் அஞ்சி, அகன்ற மனையிடத்தே ஆடும் வெறிக்கூத்தை எ-று . ஆடினாள் யார்? தலைவி . (10) 335. பாண்வரவுரைத்தல் மாணிழைக்கு வயலூரன் பாண்வரவு பாங்கிமொழிந் தன்று. (இ - ள்.) மாண்ட ஆபரணத்தினை உடையாளுக்கு வயலூரன்றன் பாணன் வரவைத் தோழி சொல்லியது எ-று. வ - று. அஞ்சொற் பெரும்பணைத்தோளாயிழையாய் தாநொடியும் 3வஞ்சந் தெரியா மருண்மாலை - எஞ்சேரிப் பண்ணியல் யாழொடு பாணனார் வந்தாரால் எண்ணிய தென்கொலோ வீங்கு. (இ - ள்.) அழகிய சொல்லையும் பெரிய வேயன்னதோளினையும் தெரிந்த ஆபரணத்தினையு முடையாய், தாஞ்சொல்லும் பொய்ம்மையை ஆராயமாட்டாத மயக்கஞ்செய்யும் மாலைப்பொழுதின்கண் எமது சேரியிடத்து இசைக்கு ஒத்தயாழுடனே பாணனார் வந்தார்; இவர் கருதிய காரியம்என்னையோ? இவ்விடத்து எ-று. (11)
1. தொல். புறத். சூ. 5, இளம். மேற். 2. சுவாதம் : வி.பா. நிவாத கவச. 15. 3. நன். சூ. 457, மயிலை. மேற்.; 458, வி. |