(இ - ள்.) பொய்ம்மைநீங்க நாடோறும் கீர்த்தியுண்டாக்குதல், என்ன அதிசயமாம், பூமியைமறைத்த தெளிந்துகறங்கும் உகாந்த வெள்ளம் விட்டு நீங்க, முற்பட மலைதோன்றிப் பூமிதோன்றாத அளவிலே வாளுடனே எல்லாரிலும் முற்பட மலையிடத்திலே தோன்றிப் பழையதாகிய குடி! எ - று. குடி புகழ்விளைத்தல் என்னவியப்பாம்.1 எவனென்பது என்னெனக் குறைந்து நின்றது. மூத்தகுடியென்றது பூசலிலே வாளாலே பட்ட குடியென்பாருமுளர். (14) கரந்தைத்திணைப்பாட்டு ஒன்றும் துறைப்பாட்டுப் பதின்மூன்றும் முடிந்தன. இரண்டாவது கரந்தைப்படலம் முற்றிற்று.
மூன்றாவது வஞ்சிப்படலம் (சூத்திரம் 3.) | வாடா வஞ்சி வஞ்சி யரவம் கூடார்ப் பிணிக்குங் குடைநிலை வாணிலை கொற்றவை நிலையே கொற்ற வஞ்சி குற்றமில் சிறப்பிற் கொற்ற வள்ளை | 5 | பேராண் வஞ்சி மாராய வஞ்சி நெடுமொழி வஞ்சி முதுமொழி வஞ்சி உழபுல வஞ்சி மழபுல வஞ்சி கொடையின் வஞ்சி குறுவஞ் சிய்யே ஒருதனி நிலையொடு தழிஞ்சி பாசறை | 10 | பெருவஞ் சிய்யே பெறுஞ்சோற்று நிலையொடு நல்லிசை வஞ்சியென நாட்டினர் தொகுத்த எஞ்சாச் சீர்த்தி யிருபத் தொன்றும் வஞ்சியும் வஞ்சித் துறையுமாகும். |
என்-னின், வஞ்சித்திணையும் துறையுமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) வஞ்சி, வஞ்சியரவம், குடைநிலை, வாணிலை, கொற்றவைநிலை, கொற்றவஞ்சி, கொற்றவள்ளை, பேராண்வஞ்சி, மாராயவஞ்சி, நெடுமொழிவஞ்சி, முதுமொழிவஞ்சி, உழபுலவஞ்சி, மழபுலவஞ்சி, கொடைவஞ்சி, குறுவஞ்சி, ஒருதனிநிலை, தழிஞ்சி, பாசறைவஞ்சி, பெருவஞ்சி, பெருஞ்சோற்றுநிலை, நல்லிசைவஞ்சி என இவை இருபத்தொன்றும் வஞ்சித்திணையும் துறையுமாம் எ - று.
(பி.ம்.) 1. 'என்னவென்பது' |