பக்கம் எண் :

வ - று.1மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார் மண்மேல்
இடங்கெடச் சென்றிறுத்த பின்னும் - நுடங்கெரிபோல்
வெல்லப் பெருகும் படையாற்கு வேந்தர்மேற்
செல்லப் பெருகுஞ் சினம்.

(இ - ள்.) சிங்கம்போற்கோபித்து மாறுபட்டெதிர்ந்தார் நிலத்தின் மேல் வெளிதூரப் படையெடுத்துப் போய்விட்டபின்பும் அசைந்தெரியும் நெருப்புப்போலச் சயிக்க வளரும் சேனையினையுடைய அரசனுக்குப் பகைமன்னர்மேல் எடுத்துச்செல்ல மிகாநிற்கும் கோபம் எ - று.

(24)

2 வென்றோர் விளக்கங் கூறியது.

60. இதுவுமது

இறுத்தபி னழிபிரங்கல்
மறுத்துரைப்பினு மத்துறையாகும்.

(இ - ள்.) எடுத்துவிட்டபின்பு பகைவர் தேசத்துக் 3கேட்டிற்கு இரங்கலை அழித்துச் சொல்லினும் முன்பு சொன்ன துறையேயாம் . எ - று.

வ - று. குரையழன் மண்டிய கோடுயர் மாடம்
4சுரையொடுபேய்ப் பீர்க்குஞ் சுமந்த - நிரைதிண்டேர்ப்
பல்லிசை வென்றிப் படைக்கடலான் சென்றிறுப்ப
நல்லிசை கொண்டடையார் நாடு.

(இ - ள்.) ஆரவாரமுடைய நெருப்புக் கொளுத்தின மலையையொப்ப ஓங்கின மாளிகையெல்லாம் பேய்ச்சுரையும் பேய்ப்பீர்க்கும் மேற்கொண்டன; ஒழுங்குபட்ட திண்ணிய தேரினையும் பலகீர்த்தியாற் சிறந்த வென்றியினையும் சேனையாகிய கடலையுமுடையான்போய் எடுத்து விட, நல்ல புகழைச் சொல்லி இவனைக் கூடாதார் தேயம் எ - று.

நாடு சுரையொடு பேய்ப்பீர்க்குஞ் சுமந்தவென்க . கொற்றவள்ளை இவ்வாறன்று.

(25)

வஞ்சித்திணைப் பாட்டு ஒன்றும் துறைப்பாட்டு இருபத்து நான்கும் முடிந்தன.

மூன்றாவது வஞ்சிப்படலம் முற்றிற்று.


நான்காவது
காஞ்சிப் படலம்
(சூத்திரம் 4.)

காஞ்சி காஞ்சி யதிர்வே தழிஞ்சி
பெரும்படை வழக்கொடு பெருங்காஞ் சிய்யே
வாள்செல வென்றா குடையது செலவே
வஞ்சினக் காஞ்சி பூக்கோ ணிலையே

1. கலி. 2 : 3; புறநா. 71 : 1.2. தொல். புறத். சூ. 8. 3. (பி.ம்.)'கேட்டையிரங்கலை' 4. 'சுரையொடுபீரஞ்'