(பார்த்தே கொங்கையாலே தழுவினாள்; ஒளிசிறந்த வதனத்தையும் கூட்டினாள்; அவ்விடத்தே வருந்தினாள்; மேலே பறிந்தது உயிர் எ - று. ஆதலால் கூற்றம் கொடிதேயென்க.) கொங்கையாலே தழுவினாள் ஒளி சிறந்த வதனத்தையும் கூட்டினாள், அவ்விடத்தே வருந்தினாள், மேலே பறிந்தது உயிர் எ - று.
ஆதலால் கூற்றம் கொடியேயென்க (13) 74. 1மறக்காஞ்சி இலைப்பொலிதா ரிகல்வேந்தன் மலைப்பொழிய 3மறங்கடைஇயன்று. (இ - ள்.) பச்சிலையாலே பொலிவுபெற்ற மாலையாற்சிறந்த வலியினையுடைய மன்னன் பகைவர் மாறுபாடு நீங்க மறத்தொழிலைச் செலுத்தியது எ - று. வ - று. கருந்தலையும் வெண்ணிணமுஞ் செந்தடியு மீராப் பருந்தோ டெருவை படர - அருந்திறல் வேறாய மன்னர் வியப்பக் கடாயினான் மாறா மறவன் மறம். (இ - ள்.) கறுத்த தலையையும் வெள்ளைநிணத்தையும் சிவந்த தசையையும் இழுத்துக்கொண்டு பருந்தும் கழுகுஞ்செல்ல அரியவெற்றியினையுடைய பகைவர் அதிசயிப்பச்செலுத்தினான் நீங்காத கொடுவினையாளன் மறத்தொழிலை எ - று. (14) 75. இதுவுமது மண்கெழு மறவன் மாறுநிலை நோனான் புண்கிழித்து முடியினு மத்துறை யாகும். (இ - ள்.) 4ஒப்பனையாற்பொலிந்த மறத்தொழிலையுடைய வீரன் பகைவருடைய மாறுபாட்டுக்குப் பொறானாகிப்5பகைவர்வேல்பட்ட தன் மார்பிற் புண்ணைப் பிளந்து மரிப்பினும் முற்பட்ட துறையேயாம் எ - று. வ - று.2நகையம ராய நடுங்க நடுங்கான் தொகையம ரோட்டிய துப்பிற் - பகைவர்முன் நுங்கிச் சினவுத னோனா னுதிவேலாற் பொங்கிப் பரிந்திட்டான் புண். (இ - ள்.) மகிழ்ச்சிமேவும் தன் கூட்டம் குலையக் குலையானாய்ச் செறிந்த போரைத் துரந்த வலியினையுடைய மாற்றார் தன்முன்னெல்லையைக்கொண்டு கோபித்தலைப் பொறானாகி வேலின்நுதியாலே வெகுண்டு அறுத்திட்டான், புண்ணினை எ - று. (15)
1. தொல். புறத். சூ. 19, இளம். மேற். 2. சிறுபாண். 220. (பி.ம்.) 3. 'மறங்கடாயின்று' 4. 'பூமியிலே பொருந்திய' 5. 'வேலினாலே புண்கிழித்து முடியினும் அத்துறையேயாம்' |