102. முற்றுழிஞை ஆடிய லவிர்சடையான் சூடியபூச் சிறப்புடைத்தன்று. (இ - ள்.) அசையுந் தன்மையினை உடைத்தாய் விளங்கும் வேணியையுடையான் மலைந்த பூவினது நன்மையைச் சொல்லியது. எ - று. வ - று. மயங்காத தார்ப்பெருமை மற்றறிவார் யாரே இயங்கரண மூன்று மெரித்தான் -தயங்கிணர்ப் பூக்கொ ளிதழிப் புரிசெஞ் சடையானும் மாக்கொ ளுழிஞை மலைந்து. (இ - ள்.) மருளாத உழிஞையின் மிகுதியை வேறுணர்வார் யாவர் தாம். திரிபுரங்கள் மூன்றையும் சுட்டான்; விளங்கும் கொத்திற் பொலிவுகொண்ட கொன்றையையுடைய புரிந்த செஞ்சடையானும் பெருமைகொண்ட உழிஞையைச் சூடி. எ - று. (8) 103. 1காந்தள் கருங்கடலுண் மாத்தடிந்தான் 2செழுங்காந்தட் சிறப்புரைத்தன்று. (இ - ள்.) கறுத்த கடலிடத்துச் சூரபன்மாவைக் கொன்றவனுடைய காந்தட்பூவின் மிகுதியைச் சொல்லியது. வ - று.3குருகு பெயரிய குன்றெறிந் தானும் உருகெழு காந்தண் மலைந்தான்-பொருகழற் 4கார்கருதி வார்முரச மார்க்குங் கடற்றானைப் போர்கருதி யார்மலையார் பூ. (இ - ள்.) குருகின் பெயர்பெற்ற மலையை எறிந்தவனும் அழகு மருவின கோடலைச் சூடினான்; வீரக்கழலினையுடைத்தாய் மேகத்தையொத்து வாராற் பிணித்த முரசுமுழங்குங் கடல்போன்ற சேனையிடத்துப் பூசலை நினைந்து யாவர் சூடார் பூவினை ?. எ - று. குருகு பெயரிய குன்று - கிரவுஞ்சகிரி (9) 104. புறத்திறை மறத்துறை மலிந்து மண்டி மாற்றார் விறற்கொடி மதிலின் புறத்திறுத் தன்று. (இ - ள்.) சினத்தின் வழிமிக்கு மேற்கொண்டு பகைவருடைய வெற்றிக்கொடியணிந்த அரணின் சுற்றிலே விட்டது. எ - று.
1. தொல். புறத். சூ. 5. இத்துறையை அகப்புறமென்பார்; யா-வி. 2. காந்தட்பூ : முருகு. 43-4. 3. மணி. 5:13. 4. பு-வெ. 127. |