வென்று விளங்கும் கண்ணாடி நிரைத்த கிடுகுபடை வணங்காதார் முனைக் குறும்பினைக் கொள்ளவேண்டிற் கொள்கை எளிதென்று சொன்னான் மன்னன் எ - று. ஆதலால் இன்று நாம் வைகல் இழிவாகுமென்க. தோலென்பது ஆகுபெயர். (12) 107. குற்றுழிஞை 1கருதாதார் மதிற்குமரிமேல் ஒருதானாகி யிகன்மிகுத்தன்று. (இ - ள்.) பகைவர் அரணாகிய அழிவில் லாததன்மேல் தான் ஒருவனுமேயாகி மாறுபாட்டினைப் பெருக்கியது எ - று. வ - று. குளிறு முரசினான் கொண்டா னரணம் களிறுங் கதவிறப் பாய்ந்த - ஒளிறும் அயிற்றுப் படைந்த 2வணியெழு வெல்லாம் 3எயிற்றுப் படையா லிடந்து. (இ - ள்.) அதிரும் வீரமுரசினையுடையான் வென்று கைப்பற்றினான் குறும்பினை; போர்யானைகளும் வாய்தலிற் கதவு ஒடியப் பாய்ந்தன; விளங்கும் வேல்வலிசிறந்த நிரைத்த கணைய முழுதும் மருப்பாயுதத்தாலே பெயர்த்து எ - று. (13) 108. இதுவுமது வளைஞரல வயிரார்ப்ப மிளைகடத்தலு மத்துறையாகும். (இ - ள்.) சங்கம் முழங்கக் கொம்பு குறிப்பக் காவற்காட்டைக் கடந்து புகுமதுவும் முன்னஞ்சொன்ன துறையேயாம் எ - று. வ - று. அந்தரந் தோயு வமையோங் கருமிளை மைந்தர் மறிய மறங்கடந்து -பைந்தார் விரைமார்பின் வின்னரல வெங்கணை தூவார் வரைமார்பின் வைகின வாள். (இ - ள்.) ஆகாயத்தைக் கிட்டும் மூங்கிலுயர்ந்த அரிய காவற் காட்டிற் பொரும் வீரர் முதுகிட மறத்தை வென்று செவ்விமாலை மணத்தையுடைய அகலத்திலே வின்னாணொலிப்ப வெவ்விய அம்பைச் சிந்துவாருடைய மலைபோன்ற அகலங்களிலே தங்கின, உழிஞை யாருடைய வாள்கள் எ - று. தூவுவாரென்பது தூவாரென இடைக்குறைந்தது. (14) 109. இதுவுமது பாடருந்தோற் படைமறவர் ஆடலொடடையினு மத்துறையாகும்.
1. "வணங்காதார் மதிற்குமரி" பு.வெ. 122. 2. புறநா. 14:2. 3. எயிற்றுப்படை: சீவக. 2164. |