பக்கம் எண் :

(இ - ள்.) சொல்லுதற்கரிய பரிசையினையுடைய சேனைத்தலைவர் ஆடுதலுடனே நொச்சியாருடைய அரணினைக் குறுகினும் முன்பு சொன்ன துறையேயாம்.

வ - று. நிரைபொறி வாயி னெடுமதிற் சூழி
வரைபுகு புள்ளின மான-விரைபடைந்தார்
வேலேந்து தானை விறலோன் விறன்மறவர்
தோலேந்தி யாட றொடர்ந்து.

(இ - ள்.) ஒழுங்குபட்ட இயந்திரங்களாலமைந்த 3புதவினையுடைய உயர்ந்த புரிசைநெற்றியிலே மலையிடத்துச்சென்றுபுகும் புட்களை யொப்பக் கடுகிக்கிட்டினார், வேலினையுயர்த்த சேனையால் நிறைந்த வெற்றியினையுடையோன் வென்றிவீரர்; கிடுகினையெடுத்துத் தாம் ஆடுதலைச் சூழ்ந்து. எ - று.

தொடர்ந்து விரைபு அடைந்தாரென்க.

(15)

110. புறத்துழிஞை

விண்டோயு மிளைகடந்து
குண்டகழிப் புறத்திறுத்தன்று.

(இ - ள்.) ஆகாயத்தைக் கிட்டும் காவற்காட்டைக் கடந்து ஆழ்ந்த கிடங்கின் கரையிலேவிட்டது.

வ - று. கோள்வாய் முதலைய குண்டகழி நீராக
வாள்வாய் மறவேந்தன் வந்திறுத்தான்-நீள்வாயில்
ஓங்க லரணத் தொளிவளையார் வெய்துயிர்ப்ப
ஆங்கொ லரிய வமர்.

(இ - ள்.) ஆளைப் பற்றுகை தப்பாத முதலையினையுடைய குழிந்த அகழே தண்ணீராக வாய்த்த வாளினையுடைய மறமன்னன் வந்து விட்டான்; நீண்ட 1வாய்தலாற் சிறந்த உயர்ச்சியினையுடைய மதிலிடத்து ஒள்ளியவளையினையுடையார் வெய்தாக உயிர்ப்ப வெல்லுதற்கரிய பூசல் ஆம்போலும். எ - று.

(16)

111. பாசிநிலை

அடங்காதார் மிடல்சாயக்
4கிடங்கிடைப் போர்மலைந்தன்று.

(இ - ள்.) பகைவருடைய வலி கெட அகழியிடத்துப் பூசலை மேற்கொண்டது

வ - று.2நாவாயுந் தோணியு மேல்கொண்டு நள்ளாதார்
ஓவார் விலங்கி யுடலவும்-பூவார்


1. வாய்தல்-வாசல். 2. தொல். புறத். சூ. 11, இளம். மேற். (பி-ம்)3. 'புகலினையுடைய' 4. 'கிடங்கினுட்'