141. நூழில் கழல்வேந்தர் படைவிலங்கி அழல்வேறிரித் தாட்டமர்ந்தன்று. (இ - ள்.) வீரக்கழன்மன்னர் சேனையைக்கொன்றுஅழலும்வேலைத் திரித்து ஆடுதலை விரும்பியது எ - று. வ - று. ஆட லமர்ந்தா னமர்வெய்யோன்வீழ்குடர் சூடன் 2மலைந்த சுழல்கட்பேய் - மீடல் மறந்தவேன் ஞாட்பின் மலைந்தவர் 2மார்பம் திறந்தவேற் கையிற் றிரித்து. (இ - ள்.) ஆடுதலை மேற்கொண்டான் போரைவிரும்பினோன்; வீழ்ந்த குடரைச் சூடுதலை மேற்கொண்டனசுழலும் விழியினையுடைய பேய், மீளுத லொழிந்த வேற்பொருள்மாறுபட்டவர் மார்பத்தை உருவின வேலைக் கையிலேதிரித்து எ - று . (15) 142. நூழிலாட்டு களங்கழுமிய படையிரிய 5உளங்கிழித்தவேல் பறித்தோச்சின்று. (இ - ள்.) பொருகளத்தைப் பொருந்திய சேனைகெடத்தன் மார்பத்தைத் திறந்து வேலைப் பறித்து எறிந்தது எ - று. வ - று. மொய்யகத்து மன்னர் முரணினியென்னாங்கொல் கையகத்துக் கொண்டான் கழல்விடலை - வெய்ய விடுசுடர் சிந்தி விரையகலம் போழ்ந்த படுசுட ரெஃகம் பறித்து. (இ - ள்.) போரிடத்து வேந்தர் மாறுபாடு இனிஎன்னாமோ ! கையிடத்துப்பற்றினான் கழல்வீரன் ;வெய்தான மிகுங்கனலைச் சிதறி மணநாறு மார்பத்தைப்போழ்ந்த ஒளிதோன்றும் வேலைப் பறித்து எ - று. (16) 143. முன்றேர்க் குரவை எழுவுறழ் திணிதோள் வேந்தன் வெஃறேர் முழுவலி வயவர் முன்னா டின்று.
1. தொல். புறத். சூ. 17. 2. குறள். 774. (பி - ம்)3. 'படைமறுத்து' 4. 'மலிந்த' 5. 'உளங்கழிந்த' |