பக்கம் எண் :

(இ - ள்.) கணையத்தையொத்த திண்ணியதோளினையுடைய மன்னனுடைய வெல்லுந்தேர்முன் நிறைந்தவலியாற்சிறந்த வீரர் ஆடியது. எ - று.

வ - று. ஆனா வயவர்முன் னாட வமர்க்களத்து
வானார்மின் னாகி வழிநுடங்கும்- நோனாக்
கழுமணிப் பைம்பூட் 2கழல்வேந்த னூரும்
குழுமணித் திண்டேர்க் கொடி.

(இ - ள்.) அமையாதவீரர் முன்னேயாடப்போர்க்களத்து மேகத்து நிறைந்த மின்போன்று முறையேயாடும்; பகைபொறாத கழுவுமணியான் அமைந்த பசும்பூணினையுடையகழல்வேந்தன் நடத்தும் திரண்ட மணியினையுடையதிண்ணிய தேர்மேற் கொடி.

(17)

144. பின்றேர்க் குரவை

கருங்கழன் மறவரொடு வெள்வளை விறலியர்
பெருந்தகை தேரின் பின்னா டின்று.

(இ - ள்.) 3வலிய கழல்வீரரொடு விளர்த்த வளையினையுடைய பாணிச்சியர்,பெரிய மேம்பாட்டினையுடையான்றனது தேரின்பின் ஆடியது. எ - று.

(வ - று.) கிளையாய்ந்து பண்ணியகேள்வியாழ்ப் பாணும்
வளையா வயவரும் பின்னாக் - கொளையாய்ந்
தசைவிளங்கும் பாடலொ டாட வருமே
திசைவிளங்குந் தானையான் றேர்.

(இ - ள்.) கிளைநரம்பை ஆராய்ந்தமைத்தசுருதியான்மிக்க யாழைவல்ல பாண்கிளையும்தோலாவீரரும் பின்பாக இசையை ஆராய்ந்து தூக்குதல்விளங்கும் பாடுதலுடனே கூத்தாட வரும்; திக்கிலேவிளங்கும் சேனையையுடையான்றனது தேர்.

பாண் என்பது சாதிப் பெயர்.

(18)

145. பேய்க் குரவை

மன்ன னூரு மறமிகு மணித்தேர்ப்
பின்னு முன்னும் பேயா டின்று.

(இ - ள்.) அரசன் செலுத்தும் கொடுமைமிக்க மணியையுடைய தேரின்பின்பும் முன்பும் பேய் ஆடியது.

(வ - று.) முன்னரும் பின்னரும் மூரிக் கடற்றானை
மன்ன னெடுந்தேர் மறனேத்தி- ஒன்னார்
நிணங்கொள்பேழ் வாய 1நிழல்போ னுடங்கிக்
கணங்கொள்பே யாடுங் களித்து.


1. சீவக. 309. (பி - ம்) 2. 'கழல்வெய்யோன்' 3. 'பெரிய'