(இ - ள்.) முன்னும் பின்னும், பெரிய கடல்போன்ற சேனையையுடைய அரசன் நெடியதேரின் மாறுபாட்டைவாழ்த்திப் பகைவரது நிணத்தைக் கொண்ட பெரியவாயினையுடைய திரண்ட பேய் சாயை போல அசைந்து மகிழ்ந்துநடமாடும். (19) 146. களிற்றுடனிலை ஒளிற்றெஃகம் படவீழ்ந்த களிற்றின்கீழ்க் கண்படுத்தன்று. (இ - ள்.) ஒளியையுடைய வேல்படுதலான் வீழ்ந்த யானையின்கீழ்ப்பட்டது எ - று. ஒளிற்றெஃகம்: விகாரம். (வ - று.)1இறுவரை வீழ வியக்கற்றவிந்த தறுகட் டகையரிமாப் போன்றான்-சிறுகட் பெருங்கைக் களிறெறிந்து பின்னதன் கீழ்ப்பட்ட கருங்கழற் செவ்வே லவன். (இ - ள்.) பெரியமலை முறிந்து வீழப் போக்கற்றுப்பட்ட கொடுமைத்தொழின்.மேம்பாட்டினையுடைய சிங்கத்தை ஒத்தான்; சிறிய கண்ணினையும் பெரிய கையினையுமுடைய ஆனையையெறிந்து பின்னர் அதன் கீழ்ப்பட்ட வலிய வீரக் கழலினையும் சிவந்த வேலினையும் உடையவன் எ - று. (20) 147. ஒள்2வாளமலை வலிகெழுதோள் வாள்வயவர் ஒலிகழலானுடனாடின்று (இ - ள்.) உரம்பொருந்திய தோளினையுடையவாள்வீரர் ஆர்க்கும் வீரக் கழலினையுடையானுடன் ஆடியது. எ - று. (வ - று.) வாளை பிறழுங் கயங்கடுப்ப வந்தடையார் ஆளமர் வென்றி யடுகளத்துத் - தோள்பெயராக் காய்ந்தடு துப்பிற் கழன்மறவ ராடினார் வேந்தொடு வெள்வாள் விதிர்த்து. (இ - ள்.) வாளைமீன் மிளிரும் மடுவினையொப்ப,வந்து பொருந்தாதார் வீரர் மேவும்வெற்றியினையுடையகொலைக்களத்துத் தோளைப்பெயர்த்து வெகுண்டு கொல்லும் வலியினையுடைய கழல்வீரர் ஆடினார், அரசனுடனே விளர்த்த வாளினை அசைத்து எ - று. (21) 148. தானைநிலை இருபடையு மறம்பழிச்சப் பொருகளத்துப் பொலிவெய்தின்று.
1. கம்ப. கடறாவு. 5; 'இறுவரை'; சீவக. 1833. 2. சீவக.783. |