195. இதுவுமது மயலறு சீர்த்தி மான்றேர் மன்னவன் இயல்பே மொழியினு மத்துறை யாகும். (இ - ள்.) மயக்கமற்ற மிக்கபுகழினையும் குதிரையாற் பூட்டப்பட்ட தேரினையுமுடையஅரசன் தன்மையினைச் சொல்லினும் முன்பு சொன்னதுறையேயாம் எ-று. (வ - று.) ஒள்வா ளமரு ளுயிரோம்பான்றானீயக் கொள்வார் நடுவட் கொடையோம்பான் - வெள்வாள் கழியாமே மன்னர் கதங்காற்றும் வேலான் ஒழியாமே யோம்பு முலகு. (இ - ள்.) ஒள்ளிய வாட்பூசலிடத்து உயிரைப்பாதுகாவான், தான் கொடுப்ப ஏற்பாரிடை வழங்குதலைப்பரிகரியான், தெளிந்தவாளை உறையினின்றும் வாங்காமே அரசர்கோபத்தைக் கால்விக்கும் வேலினையுடையான்தப்பாமே காக்கும், உலகத்தை எ - று. (7) 196. கண்படைநிலை நெடுந்தேர்த் தானை நீறுபட நடக்கும் கடுந்தேர் மன்னவன் கண்படை மலிந்தன்று. (இ - ள்.) உயரிய தேரான் மிக்க பகைவர்சேனை பொடிபடச் செல்லும் கடுந்தேரினையுடைய வேந்தனது துயிலை மிகுத்தது எ - று. (வ - று.)1மேலா ரிறையமருண்மின்னார் சினஞ்சொரியும் வேலான் விறன்முனை வென் றடக்கிக் - கோலாற் கொடிய வுலகிற் குறுகாமை யெங்கோன் கடியத் துயிலேற்ற கண். (இ - ள்.) வீரர் தங்கிய போரிடத்து ஒளிநிறைந்து செற்றம்பொழியா நிற்கும் வேலாலே வலியபூசலைச் சயித்து ஒடுக்கிச் செங்கோனீதியாற் கொடியவை பூமியிடத்துக் கிட்டாமை எம்முடைய அரசன் நீக்குதலான் உறக்கத்தை மேவின, விழிகள் எ - று. (9) 197. துயிலெடைநிலை அடுதிறன் மன்னரை யருளிய வெழுகெனத் தொடுகழன் மன்னனைத் துயிலெடுப் பின்று. (இ - ள்.) கொல்லும் வலியினையுடைய வேந்தர்க்குஅருள எழுந் திருப்பாயாகவெனக் கட்டுங் கழல்வேந்தனைத் துயினீக்கியது எ - று. (வ - று.)2அளந்த திறையா ரகலிடத்துமன்னர் வளந்தரும் வேலோய் வணங்கக் - களந்தயங்கப்
1 . தொல். புறத். சூ. 29, இளம். மேற். 2. தொல். புறத். சூ.30. இளம். மேற். |