பூமலர்மேற் புள்ளொலிக்கும் பொய்கைசூழ் தாமரைத் தூமலர்க்க1 3ணேற்க துயில். (இ - ள்.) இட்ட திறையினையுடையார்அகன்ற பூமியிடத்து வேந்த, வென்றிதரும் வேலினையுடையாய், நின்னைப் பணிய, இடம் விளங்கப் பொலிந்த மலர்மீதேபறவைகள் ஆரவாரிக்கும் பொய்கையிற் சூழ்ந்த தாமரையில் தூயமலரையொத்த கண்கள் துயிலாவாக எ - று. (9) எழுக துயிலென்றுமாம். 198. மங்கலநிலை கங்குற் கனைதுயி லெழுந்தோன் முன்னர் மங்கலங் கூறிய மலிவுரைத் தன்று. (இ - ள்.) கங்குலிடத்து மிக்க உறக்கத்தைநீங்கினோன் முன்னே மங்கலத்தைச் சொன்ன மிகுதியைச்சொல்லியது எ - று. (வ - று.) விண்வேண்டின் வேறாதன் மங்கலம்வேந்தர்க்கு மண்வேண்டின் கைகூப்பன் மங்கலம் - பெண்வேண்டின் துன்னன் மடவார்க்கு மங்கலம் தோலாப்போர் மன்னன்வரைபுரையு மார்பு. (இ - ள்.) சுவர்க்கத்தை விரும்பின் வேறுபடுதல் ஆக்கம்; மண்ணாள வேண்டின் கைகுவித்தல் ஆக்கம் அரசர்க்கு; பெண்மைத் தன்மையை விரும்பின் அணையுமது பேதையர்க்கு ஆக்கம், தோல்வியறியாத பூசலையுடைய வேந்தன்றன் வரைபோன்ற அகலத்தை எ - று. (10) 199. இதுவுமது மன்னிய சிறப்பின் மங்கல மரபிற் றுன்னின னென்றலு மத்துறை யாகும். (இ - ள்.) நின்று நிலைத்த முறைமையினையுடையமங்கலத்தை முறைமையாலே மேவினனென்னறு சொல்லுதலும்முன்புசொன்ன துறையேயாம் எ - று. (வ - று.) தீண்டியுங் கண்டும் பயிற்றியுந்தன்செவியால் வேண்டியுங் கங்குல் விடியலும் - ஈண்டிய மங்கல மாய நுகர்ந்தான் மறமன்னர் வெங்களத்து 2வேலுயர்த்த வேந்து. (இ - ள்.) தீண்டக்கடவன தீண்டியும் காணக்கடவனகண்டும் சொல்லக்கடவன சொல்லியும் தன்னுடைய செவியாற்கேட்கக்கடவன கேட்டும் இரவுப்பொழுது புலர்ந்ததாகத்திரண்ட மங்கலமானவற்றை அனுபவித்தான், மாற்சரியத்தையுடையவேந்தர்தம் வெவ்விய போர்க்களத்து வென்று வேலேந்தினஅரசன். எ - று. (11)
1. புறநா. 383; 1; பெருங். 4; 7: 91-2. 2. புறநா. 58; 29; 309: 7. (பி-ம்.) 3. 'ணேர்க' |