பக்கம் எண் :

200. விளக்கு நிலை

அளப்பருங் கடற்றானையான்
விளக்குநிலை விரித்துரைத்தன்று.

(இ - ள்.) அளத்தற்கரிய கடல்போன்ற சேனையினையுடையான்றனது விளக்கினது நிலையைப் பரப்பிச் சொல்லியது எ-று.

(வ - று.)1வளிதுரந்த கண்ணும் வலந்திரியாப் பொங்கி
ஒளிசிறந் தோங்கி வரலால் - அளிசிறந்து
நன்னெறியே காட்டு நலந்தெரி கோலாற்கு
வென்னெறியே காட்டும் விளக்கு.

(இ - ள்.) காற்றெறிந்தவிடத்தும் வலமாகச் சுழன்றெழுந்து சோதிவிட்டு உயர்ந்துவருவதால், தண்ணளியைமிகுத்து அழகிய வழியைக் காட்டவல்ல நன்றியை ஆராயும் செங்கோலினையுடைய வேந்தற்கு வெல்லு முறைமையே காட்டாநிற்கும் விளக்கு எ-று.

(12)

201. இதுவுமது

அடரவிர் பைம்பூண் வேந்தன் றன்னைச்
சுடரொடு பொருவினு மத்துறை யாகும்.

(இ - ள்.) பொற்றகட்டாற் சிறந்துவிளங்கும் பூணினையுடைய மன்னன்றன்னை ஆதித்தனோடு உவமிப்பினும் முன்புசொன்ன துறையேயாம் எ-று.

(வ - று.) வெய்யோன் கதிர்விரியவிண்மே லொளியெல்லாம்
மையாந் தொடுங்கி மறைந்தாங்கு - வையகத்துக்
கூத்தவை யேத்துங் கொடித்தேரான் கூடியபின்
வேத்தவையுண் மையாக்கும் வேந்து.

(இ - ள்.) ஆதித்தனுடைய சோதிபரக்க ஆகாயத்திடத்து ஒளியை யுடையன வெல்லாம் புற்கென்றுஅடங்கி ஒளித்தாற்போல , ஞாலத்துக் கூத்தர் திரளெல்லாம்புகழும் கொடித்தேரினை யுடையான் வந்தணைந்த பின்பு அரசவையிடத்துப் புற்கென்னும் , வேந்தர்திரள் எ-று.

(13)

202. கபிலைகண்ணிய புண்ணியநிலை

அண்ண னான்மறை யந்தணா ளர்க்குக்
கண்ணிய கபிலை நிலையுரைத் தன்று.

(இ - ள்.) தலைமையாற்சிறந்த நான்கு வேதத்தினையுமுடைய அந்தணர்க்குக் கொடுக்கக் கருதிய பசுவினது முறைமையைச் சொல்லியது எ-று.

(வ - று.)1பருக்காழுஞ்செம்பொன்னும்பார்ப்பார் முகப்பக்
குருக்கட் 2கபிலை கொடுத்தான் - செருக்கோ


1. தொல். புறத். சூ. 29 இளம். மேற். 2. பெருங். 1.39 : 64-9.