242 செய்யுளில் தொடை நோக்கிப் பயன்படும் எழுத்துப் போலிகளாக அவை ஆதலையும் குறிப்பிட்டார் என்பது அறியப்படும். இனி, இலக்கணக் கொத்து நூலார் “போலி எழுத்தைப் போற்றுதல் கடனே இ.கொ.91 என்றது, ஈரெழுத்துக்கள் கூடி ஓர் எழுத்துப் போல வருவனவற்றைத் தள்ளாது கொள்ளுக என்றவாறு. தள்ளில், ‘ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்’ ‘ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும் மெய்ந்நடு நிலையும் மிகும்நிறை கோற்கே’ ‘கையி னால்சொலக் கண்ணினில் கேட்டிடும் மொய்கொள் சிந்தையின் மூங்கையும் ஆயினேம்’ ‘கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் பொய்தீர் சாட்சிப் புரையோய் போற்றி’ ‘ஒளவிய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்’ இவை போல் வரும் செய்யுள் எல்லாம் மோனைத் தொடையோடும் எதுகைத் தொடையோடும் மாறுபட்டு இலக்கண வழுவாதல் காண்க. வடநூலார் இவ்விலக்கணத்தைத் தள்ளாது சமானாக்கரம் என்று பெயரிட்டு இவ்விரண்டைனையும் தழுவினார். அது பற்றித் தமிழ் நூலார் இணைஎழுத்து என்று மொழி பெயர்க்க மறந்து, போலிஎழுத்து என்று’ மொழி பெயர்த்ததனால் போலிச் சரக்கு, போலி இலக்கணம், போலி உரை என்றும் சொற்களைப் போல இதனையும் கருதி முன்னும் பின்னும் பாராது தள்ளினார். அது பற்றியே இச்சூத்திரம் செய்தனம் என்க’ என்று குறிப்பிட்டுள்ளதை நோக்குக, |