பக்கம் எண் :

533

‘ஆயிரம் வரினே இன்னே சகரியை
ஆவயின் ஒற்றிடை மிகாதுஇயல்பு ஆகும்,’      296

‘அளவும் நிறையும் வரின்இயல்பு ஆகும்.’

‘அளவும் நிறையும் ஆயியல் திரியா.’      297

பத்தின்முன் இரண்டு

116. இரண்டு முன்வரின் பத்தின்ஈற்று உயிர்மெய்
கரந்திட ஒற்று ன-ஆகும் என்ப.

இது பத்தின்முன் இரண்டும் வந்து புணர்வழிப்படுச் செய்கை கூறுகின்றது.

இ-ள்: இரண்டு என்னும் எண் பத்து என்னும் எண் முன்னர் வந்து புணரின், இதன் ஈற்று உயிர்மெய் கெட, மேல் என்ற நகரஒற்று னகர ஒற்றாய்ப் திரிந்து முடியும் என்றவாறு.

வரலாறு : பன்னிரண்டு என வரும். 64

விளக்கம்

பன்னிரண்டு-பத்தும் இரண்டும் என உம்மைத் தொகை. இப்புணர்ச்சிக்கு இந்நூற்பா விதி வகுக்கிறது-பதிற்றிரண்டு என்பது பண்புத்தொகை. அது பத்தாகிய இரண்டு என விரியும், அதற்கு விதி சென்ற நூற்பா என அறிக.

ஒத்த நூற்பாக்கள்:

‘பத்தன் ஒற்றுக்கெட னகரம் இரட்டல்
ஒத்தது என்ப இரண்டு வருகாலை.’           தொல். 425

முழுதும்           நன். 198,           மு. வீ. பு. 257