பக்கம் எண் :

638

ஒத்த நூற்பாக்கள்:

‘எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும்
எல்லீரும் என்னும் முன்னிலை இறுதியும்
ஒற்றும் உகரமும் கெடும்என மொழிப
நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி
உம்மை நிலையும் இறுதியான
தம்இடை வரூஉம் படர்க்கை மேன
நும்இடை வரூஉம் முன்னிலை மொழிக்கே.’

முழுதும் -          நன்.246          . மு.வீ.பு. 66

தொடக்கம் குறுகும் பெயர்கள்

154 தான்நாம் தாம்முதல் குறுகும் யான்யாம்
நீ நீர் என்எம் நின்நும் ஆம்பிற
குவ்வின் அ-வரும் நான்குஆறு இரட்டல.

இது னகர மகர ரகர ஈறுகட்கும் ஈகார ஈற்றிற்கும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.

இ-ள்: தான்-தாம்-நாம் என்னும் மூன்று பெயரும் முறையே தன் என்றும், தம் என்றும், நம் என்றும் நெடு முதல் குறுகும்; யான்-யாம்-நீ-நீர் என்னும் நான்கு பெயரும் முறையே என் என்றும் எம் என்றும் நின் என்றும் நும் என்றும் திரியும்; அங்ஙனம் திரிந்தவழி நான்கன் உருபுபுணரும் இடத்து இடையே அகரச்சாரியை வரும். இம்மொழிகளொடு நான்கன் உருபும் ஆறன் உருபும் புணரும் இடத்துக் குற்றொற்று இரட்டா என்றவாறு.

இவ்வெழுத்து இவ்வெழுத்தாய்த் திரியும் என்னாது யான்-யாம்-நீ-நீர் என்பன முறையே என்-எம்-நின் நும்-ஆம் என்றாரேனும்