பக்கம் எண் :

642

ஒத்த நூற்பாக்கள்:

‘சுட்டுமுதல் வகரம் ஐயும் மெய்யும்
கெட்ட இறுதி இயல்திரிபு இன்றே.’           தொல். 183

முழுதும்           நன். 250

‘சுட்டுமுதல் வகரம் அற்றொடு சிவணும்.’           மு.வீ.பு. 57

குற்றுகர ஈற்றுப் பெயர்கள்
சிலவற்றிற்குச் சிறப்புவிதி 156-157
அன்சாரியைப்பேறு

156 யாதென் இறுதியும் சுட்டுமுதல ஆகிய
ஆய்த இறுதியும் அன்னொடு சிவனும்
ஆய்தம் கெடுதல் ஆவயி னான.

இது குற்றுகர ஈற்றுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.

இ-ள்.: யாது எனவரூஉம் குற்றுகரஈறும், சுட்டினை முதலாக உடைய ஆய்தத்தொடர்மொழிக் குற்றுகரஈறும் அன்சாரியையொடு பொருந்தும்; அவ்விடத்து இடைநின்ற ஆய்தம் கெடும் என்றவாறு.

வரலாறு: யாதனை யாதனொடு எனவும், அதனை அதனொடு-இதனை இதனொடு-உதனை உதனொடு எனவும் வரும். பிறவற்றொடும் இவ்வாறே ஒட்டுக.

விளக்கம்

எய்தியது - இன்சாரியைப்பேறு

பிறிதுவிதி - அன்சாரியைப்பேறு

ஈற்றயல் எழுத்து ஈறு என்றே குறிப்பிடும் தொல்காப்பியனார் மதத்தை உட்கொண்டு, ஈற்றயலெழுத்தாகிய ஆய்தம் பெற்ற சொல்லை’ ஆய்த இறுதி’ என்றார்.