பக்கம் எண் :

644

இது குற்றுகரஈற்று எண்ணுப்பொருள் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.

இ-ள்.: ஒன்றுமுதலாக எட்டு இறுதியாக நின்ற எண்ணுப்பெயர்களின்மேல் வந்துபஃது எனவும் பது எனவும் முடிந்து நின்ற பத்து என்னும் எண்ணுப்பெயர் முன்னர் ஆன்சாரியை வரின், பகரஒற்று நிற்க ஏனைய எல்லாம் கெடும். ஒன்பதன் முன்னர் ஆன்வரினும் இவ்வாறு கெடும், உருபுபுணர்வழி, என்றவாறு.

வரலாறு: ஒரு பானை-ஒரு பானொடு எனவும் ஒன்பானை-ஒன்பானொடு எனவும் வரும். பிறவற்றொடும் இவ்வாறே ஒட்டுக.

மேல்,’பல்லவை நுதலிய அகர இறுபெயர்
அற்றொடு சிவணல்.’           இ. வி. 150

என்று ஒழியாது, ‘எச்சம் இன்றே’ என்ற மிகையானே,

இன் பெறுவன பெறாது விளவை-பலாவை என்றாற் போல முடிதலும்,

மகத்தை-நிலாத்தை எனப் பிறசாரியை பெறுதலும்,

விளவத்துக்கண்-பலாவத்துக்கண் என அகர ஆகார ஈற்று மரப்பெயர்கள் ஏழன் உருபொடு புணர்வழி அத்துப் பெறுதலும்,

யா என்னும் ஆகாரஈற்று வினாப்பெயர் யாவற்றை யாவற்றொடு என அற்றுப்பெற்றே முடிதலும்.

அது இது உது என்னும் முற்றுகர ஈற்றுச் சுட்டுப்பெயர்கள் அதனை அதனொடு-இதனை-இதனொடு-உதனை உதனொடு என அன்பெற்றே முடிதலும்,

அவை-இவை-உவை என்னும் ஐகார ஈற்றுச் சுட்டுப் பெயர்கள் அவையற்றை அவற்றை-இவையற்றை இவற்றை