பக்கம் எண் :

648

கரியவற்றை நெடியவற்றை-

‘யாஎன் வினாவின்’ என்ற நூற்பாவில், வற்றுமிசை ஒற்று என்றுகெடும் வகரத்திற்குக் கேடு ஓதிய மிகையான் கொள்ளப்பட்டன. (178 நச்.)

மரத்தை மரத்தொடு-நுகத்தை நுகத்தொடு

‘மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை.’      185

என்பது.

கரியேம் நம்மையும்-

‘எல்லாரும் என்னும்’ என்ற நூற்பாவில் படர்க்கைப் பெயரை முன்னிலைக்கு முன்கூறிய மிகையான் கொள்ளப்பட்டது. (191.நச்.)

கரியார்தம்மையும் கரியீர் நும்மையும்

இவையும் ‘எல்லாரும் என்னும்’ என்னும் நூற்பாவில் படர்க்கைப்பெயரை முற்கூறிய மிகையான் கொள்ளப்பட்டன. (191.நச்.)

எல்லார்க்கும்-

இதுவும் முற்கூறிய மிகையானே கொள்ளப்பட்டது. (191.நச்.)

அழத்தை புழத்தை-

‘அழனே புழனே ஆயிரு மொழிக்கும்
அத்தும் இன்னும் உறழத் தோன்றல்
ஒத்தது என்ப உணரு மோரே’ (192)

என்பது.