கருத்து உடையவர் ஆயினும், தொல்காப்பியர் கருத்தை ஒட்டியே தாம் சேறல் வேண்டும் என்ற எண்ணத்தால் ‘பன்மை சுட்டிய பெயர்அலங் கடையே’ என்று உரைத்து பொருந்துமாறில்லை. |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே’. |
| தொல்.சொல்.180 |
| ‘ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே.’ |
| 181 |
| ‘ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே.’ |
| 183 |
| ‘பாங்கார் பெயர்வினை கொண்டன்றிப் பால்தோன்றா ஆங்கு விரவுப் பேர்.......... .......’ |
| நே. சொல்.37 |
| ‘ஒன்றே இருதிணைத் தன்பால் ஏற்கும்.’ |
நன். 284 மு.வீ.பெ-33. |
| தொல்காப்பிய நூற்பாக்களையே சிறிது திரித்து முத்துவீரியம் கூறும் |
-மு.வீ.பெ. 34, 35, 37 |
பன்மைப் பெயர் பாலுணர்த்துமாறு |
186 | பன்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றே பலவே ஒருவர் என்னும் என்றுஇப் பாற்கும் ஒரன் னவ்வே. |
இது பன்மைப்பெயர் இருதிணையும் பற்றிப் பால் உணர்த்துமாறு கூறுகின்றது. இ-ள் பன்மை சுட்டிய மூன்று பெயரும் அஃறிணை ஒருமையும் அத்திணைப் பன்மையும் உயர்திணை ஒருமையும் என்று சொல்லப்படும் மூன்று பாற்கும் ஒத்த உரிமை என்றவாறு. |