சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

104 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

மூன்று எனப்படுதலான் முறைப்பெயர் இரண்டாம் என்பதனொடு முரணுதலானும், இயற்பெயராய் நிற்பனவற்றிற்கு அன்றி விகுதியொடு வரும் பெயரை ஈண்டு விதிக்கப் புகாமையானும், தொல்காப்பியத்தோடு முரணுதலானும் அது பொருந்தாது என மறுக்க.
 

அமைதி
 

ஆண்மை சுட்டிய பெயர் முதலியவற்றால் உணர்த்தும் இயலாத அஃறிணைப்
பன்மையைத் தான் ஒன்றுமே சுட்டி நிற்கும் சிறப்பினை உட்கொண்டு தொல்காப்பிய
உரையாசிரியர்கள் கூறியவாறே இதனைத்தன்னோடு இயைபின்மை நீக்கிய விசேடணம்
அடுத்துநின்றது என்ற இவ்வாசிரியர் சுட்டியதன்கண் குறையின்மை அறிக.
பன்மைப்பெயர் மற்றவை போலாது தன்பெயருக்கு ஏலாத ஒருமையையும் சுட்டுதலான்,
அது தன்னோடு இயைபின்மை நீக்கிய விடேசணம் அடுத்தது ஆதற்கண் இழுக்கு
எதுவும் இன்று. அஃறிணைப் பன்மையைத் தான்மாத்திரமே சுட்டுதல் இதன் விசேட
உரிமை ஆதலும் காண்க. வழுவன்று என்பதை விளக்கவே இதன் விசேடண
இலக்கணத்தை விளக்கிக் கூறியதும் காண்க. பன்மை சுட்டிய பெயர் பற்றிய நூற்பாவில்
அதன் பெயரது ஆராய்ச்சியை விளக்கிக் கூறவே, அத்தலைமை பற்றி யமைந்த பெயர்
போதருதலும் காண்க. தொல்காப்பியத்தை ஒட்டிப்பேசும் முனிவர் அதன்கண்
காணப்பெறாத பஃறொடைவெண்பா, பஃறாழிசைக் கொச்சகம், சிஃறாழிசைக் கொச்சகம்,
உயர்திணைக்கண் கள் ஈறு முதலியவற்றை மேற் கொண்டு விரித்துரைப்பது பொருத்தமில்
கூற்றாதலும் காண்க.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

 

முழுதும்

தொல்.சொல்.183

  ‘பன்மையைக் குறித்த பெயரெல் லாமும்
ஒன்று பலஒரு மைக்கும் உரிய.’

மு.வீ.பெ. 36