சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-29105

மூவிடப் பெயர்கள்
 

187
 
தன்மை யான்நான் யாம்நாம் முன்னிலை
எல்லீரும் நீயிர் நீவிர் நீர்நீ
அல்லன படர்க்கை எல்லாம் எனல்பொது.

இது மேல் ‘தன்மை நான்கும் முன்னிலை ஐந்தும்’ என்றார், அவை இவை
என்பதூஉம், ஏனைப்பெயர்கள் இவ்விடத்தன ஆம் என்பதூஉம் உணர்த்துகின்றது.

இ-ள்: மேல் கூறிப் போந்த தன்மைப்பெயர் நான்கு ஆவன யான்
என்பதூஉம் நான் என்பதூஉம் யாம் என்பதூஉம் நாம் என்பதூஉம் ஆம்.
முன்னிலைப்பெயர் ஐந்தாவன எல்லீரும் என்பதூஉம் நீவிர் என்பதூஉம் நீயிர்
என்பதூஉம் நீர் என்பதூஉம் நீ என்பதூஉம் ஆம். இவை ஒழித்து ஒழிந்த
பெயர்கள் எல்லாம் படர்க்கை இடத்திற்கு உரியனவாம். அவற்றுள் எல்லாம் என்பது
மூன்றிடத்திற்கும் உரித்தாம் என்றவாறு.
 

  ‘பேய்பூதம் மந்தி கிளிபூவை பேசுதலான்
ஆகுமே தன்மை பொது’
என்ப ஆதலின், தன்மையும் விரவுப்பெயர் ஆயிற்று.
  ‘நுமர் எங்கும் தீதுஇன்றி நும்மையான் காப்பேன்
அமர் எங்கும் நாடி அரும்பிணம் தின்பேன்
புனர் அங்கி என்பது என் புல்லிய மெய்ப்பெயர்
‘நமரங்காள் பேணுமின் நன்குஎன் றதுவே’
எனவும்,
 

எனவும்,

‘மூன்றுஐந்தின் மூன்றுஇட்ட மொய்கொள் கணங்களுள்
தோன்றல்அம் பூதம்என் தோற்றம் திரியல்’
 
  ‘ஈங்கினி என்னை நோக்கி எவன்செய்தி எனக்கு வாணாள்
நீங்கின சிறிது நிற்பின் காண்டியால் நீயும் என்னத்