சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா- 211

என்றார் ஆசிரியர் அகத்தியனாரும் என்று உணர்க. முயற்கோடு யாமைமயிர்க்கம்பலம்
என்றாற் போல்வனவும் பொருள் விளக்கியனவேயாம். என்னை? அவையும்
பொய்ப்பொருள் விளக்கலின்.                                                      2
 

விளக்கம்
 

உயர்திணைச்சொல் அஃறிணைச்சொல் என்ற இரண்டனுள்ளே அடங்குவன
பிறவற்றை நுண்ணறிவினார் அன்றி ஏனையோரும் விளங்கிக் கோடற்பொருட்டு விளக்கிக்
கூறினார். உயிர்ப்பொருள், உயிர்இல்பொருள் என்பனவும் அன்ன.

கடியென்கிளவி (தொல்.சொல்.383) என்பது கடி என்ற ஓர் உரிச்சொல்லையே
சுட்டுவதால் சொன்மை தெரிதலாம். ‘புனிறு என்கிளவி’ (தொல்.சொல்.375) என்பதும்
அது.

சாத்தன், உண்டான் என்பன பெயர்ப்பொருளையும், அப்பொருளின்
புடைப்பெயர்ச்சியாகிய வினையையும் முறையே உணர்த்தலான் பொருண்மை தெரிதலாம்.
 

 ‘ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே’ தொல்.சொல். 1
 

என்புழி, சொல் என்பது மொழியிலுள்ள சொற்களையெல்லாம் குறிக்குமிடத்துப்
பொருண்மை தெரிதலாம்; ஈரெழுத்து ஒரு மொழியாகிய தன்னையும் நாமகளாகிய
தெய்வத்தையும் உணர்த்தி முறையே அஃறிணையாகவும் உயர்திணையாகவும் பொருள்
தருமிடத்துச் சொன்மை தெரிதலாம்.

‘உருபு .... ஈறுபெயர்க்கு ஆகும் இயற்கைய என்ப’ (தொல்.சொல்.69) என்புழி,
மொழியிலுள்ள எல்லாப் பெயர்களையும் பெயர் என்ற சொல் உணர்த்தும் வழிப்
பொருண்மை தெரிதலாம்; பெயர் என்ற தன்னை மாத்திரம்