சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-31, 32113

 றாற்போல்வனவற்றை விளக்க வந்தது இந்நூற்பா என வலிந்துரை யாதல் காண்க.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

  முழுதும் -
 
நன். 287

 

‘யான்நான்நீ தான் ஒருமை யாம்நாம் நீர்நீவிர்
எல்லீர் நீயிர்தாம் எல்லாம் பன்மை.’
தொ.வி.51
இருவன் இருத்தி முதலாக வாராமை
 
190 ஒருவன் ஒருத்திப் பெயர்மேல் எண்இல.
 
 

இது மேற்கூறிய எண் இயற்பெயருள் ஒரு சாரனவற்றிற்கு எய்தியது
விலக்குகின்றது.

இ-ள்: உயர்திணை ஆண்பால்பெயரும் பெண்பால் பெயரும் எண் அடியாகத்
தோன்றும் காலத்து, ஒன்று என்பது அடியாக ஒருவன் ஒருத்தி எனத் தோன்றுவது
அல்லது, அதன்மேல் நின்ற இரண்டு முதலிய எண் அடியாக இருவன் இருத்தி
எனத்தோன்றுதல் உளவாகா என்றவாறு.
 

விளக்கம்
 

மேற்கூறிய என்றது-177, 178-ஆம் நூற்பாக்களை.
                    எண்ணியற்பெயர் - எண் அடியாகத் தோன்றிய பெயர்.
 

பகுதி பன்மையாயின் பன்மைவிகுதியே சேர்தல் வேண்டலின், அன்ஈறும்
இகரஈறும் ஆகிய விகுதிகள் இரண்டு முதலிய எண் அடியாகவரும் பெயரொடு
பொருந்தா எனபது.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

 

‘ஒருமை எண்ணின் பொதுப்பிரி பாற்சொல்
ஒருமைக்கு அல்லது எண்ணுமுறை நில்லாது.’ தொல்.
சொல்.44