ஆனால் கருப்பொருள்களுள் அவ்வந் நிலத்து மக்களை சிறப்புவகையான் உணர்த்தும், வெற்பன் பொருப்பன் காளை, மீளி, நாடன் தோன்றல், ஊரன் மகிழ்நன், சேர்ப்பன், புலம்பன் என்றல் தொடக்கத்துப் பெயர்கள் முறையே அவ்வந்நிலத்திற்கே உரிமை பூண்டு நிற்கும் மக்களைச் சுட்டும் பெயர்கள் ஆதலின், சொல்அளவில் விரவுப்பெயராயினும் பொருள் அளவில் உயர்திணையே உணர்த்தலின், உயர்திணைப் பெயராகவே கொள்ளப்படும் என்பதனைத் தொல்காப்பியனார், |