சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-33119

பால் வினை கொள்ளாது, பொருள்பற்றிப் பெண்பால் வினை கொள்ளும் என்பது,
 

 

‘மகடூ மருகின் பால்திரி கிளவி
மகடூ இயற்கை தொழில்வயி னான’
 

தொல்.சொல்.194
என்ற தொல்காப்பிய நூற்பாவால் போதரும்.

சாத்தன் கொற்றன் என்ற பெயர்கள் சாத்தனார் கொற்றனார் என ஆர் ஈறு
அடுத்து வருதல் ‘வழக்கின் ஆகிய உயர் சொற்கிளவி’ (தொல்.சொல்.27) என்ற
தலைப்பினுள் அடங்கும்.அலவன் கள்வன் என்பன நண்டினுக்கு இயல்பாகவே அமைந்த
சாதிப்பெயர் ஆதலின், அவற்றைப் பால் காட்டும் ஈறுபற்றித் திணையின் பாற்படுத்தல்
கூடாது.
 

சூறாவளி
 

காளைவிடலை என்பன பொதுப்பெயர் என்றார். சிறப்பெயரொக ‘நம்பி
ஆடூஉவிடலை’ எனச் சூத்திரத்ததை மறந்தார்போலும். இங்ஙனம் முன்னொடு பின்
மயங்கிக் கூறுதல் அவர் இயல்பு என்க. எருத்தைக் காளை விடலை என அடிப்பட்ட
சான்றோரான் வழங்கப்படாமையும் உணர்க.
 

அமைதி
 

காளைவிடலை என்பன உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாக வரும்
இயல்பினவாகிய சொற்கள் ஆதலின், அவை பொதுப்பெயர் எனப்பட்டன. ஆனால்
அவை திணையொடு பழகிய பெயராகிய நிலையில் உயர்திணைக்கே உரிமை பூண்டு
நிற்றல் பற்றி ‘நம்பிஆடூஉ’ என்பனவற்றொடு விடலை எனபதனையும் சிறப்புப்பெயர்
என்றார்.

‘எருத்தையும் காளை விடலை என்ப’ என்ற கருது சேனாவரையர்
நச்சினார்க்கினியர்முதலிய சான்றோர் கொண்ட கருத்து என்பதும் ஓர்க.