சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

120 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

‘காளை வந்தான் காளை வந்தது’ என இக்காலத்துப் பயின்று வருவன
(நன்.284 விருத்தி) என்று காட்டும் முனிவர், முற்காலத்து அவை பயிலாது வந்தனவாதல்
வேண்டும் என்பதனையும் உட்கொண்டுள்ளமை காண்க.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி
இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை.’
 
தொல்.சொல்.191
  ‘தன்மை சுட்டின் பன்மைக்கு ஏற்கும்.’

192

  ‘இயற்பயெர் முன்னர் ஆரைக் கிளவி
பலர்க்குரி எழுத்தின் வினையொடு முடிமே.’
 

270

  ‘இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும்
இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா
நிலத்துவழி மருங்கின் தோன்ற லான.’
 

196

  ‘திணையொடு பழகிய பெயரலங் கடையே.’
 

197

  ‘எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி
பல்வழி நுதலிய நெறித்தா கும்மே.’
 

186

  ‘தன்னுள் ளுறுத்த பன்மைக்கு அல்லது
உயர்திணை மருங்கின் ஆக்கமி இல்லை.’
 

 187

  ‘மகடூ மருங்கின் பால்திரி கிளவி
மகடூ இயற்கை தொழில்வயி னான.’

194

  முழுதும் நன்.289, மு.வீ.பெ. 46
  ‘பெண்மகன் என்னும் பெயர்வினை கொள்ளுங்
கால்அதற் குரிய வினையொடு சிவணும்.’
மு.வீ.பெ.46
  ‘இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி
பலர்க்குஉரி எழுத்தின் வினையொடு முடியும்.’

மு.வீ.ஒ. 16