இது மேல் ஆக்கம் பற்றி வரும் ஆகுபெயர் என்றதன் இலக்கணம் கூறுகின்றது. இள்: பொருள் முதலாகிய ஆறனுடனே அளவையும் சொல்லும் தானியும் காரணமும் காரியமும் கருத்தாவும் முதலியவற்றுள் ஒன்றன் பெயரானே விடாதாக விட்டதாக யாதானும் ஒருவாற்றான் அதனுக்கு இயைபுடைய பிறிது ஒன்றனைத் தொன்றுதொட்டு வரும் முறையால் கூறுவன ஆகுபெயராம் என்றவாறு, |