சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-34-35133

   ‘அளவும் நிறையும் அவற்றொடு கொள்வழி
உளவென மொழிப உணர்ந்திசி னோரே.’
116
  ‘கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும்
கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே’
117
  ‘ஒன்றன்பேர் ஒன்றற் குரைப்பதாம் ஆகுபெயர்
சென்றவைதாம் தம்முதலின் சேர்தலொடு- ஒன்றாத
வேறொன்றின் சேர்தல் என இரண்டாம் வேற்கண்ணாய்
ஈறு திரிதலுமுண் டீண்டு.’
நே.சொல்.23
  முழுதும் - நன்.290
  ‘ஆகுபெயர் என்பது அவ்வவ முதல்சினை
கருவி காரியம்பண்பு இவற்றுஒன் றன்பெயர்
பிறிது ஒன்றற்கு உரைக்கும் பெற்றி தானே.’
 
தொ.வி. 49
  ‘ஒன்றன் பெயரான் அதற்குஇயை பிறிதை
அறைகுவ ஆகும் ஆகுபெயரே.’
மு.வீ.சூ.113


வேற்றுமை எட்டே
 

193 ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும்ஈ றாய்ப் பொருள்
வேற்றுமை செய்வன ஏழ்என மொழிப
விளிகொள் வதன்கண் விளிஅலங் கடையே-
 
 

மேல் ‘வேற்றுமைக்கு இடனாய்’ எனப்பெயர்க்கு இலக்கணமாகக் கூறிப் போந்த
வேற்றுமைகளை விரித்துக் கூறுவான் தொடங்கினவற்றுள், இஃது அவை நிற்கும் இடனும்
அவற்றின் பொது இலக்கணமும் அவை இத்துணைய என்பதூஉம் உணர்த்துகின்றது.

இ-ள்: தம்மை ஏற்றுக் கோடற்கு உரிய எப்பகுதிப்பட்ட பெயர்க்கும்
இறுதிக்கண்ணவாய்ப் பெயர்ப்பொருளை வேறுபடுத்தும் வேற்றுமைகள் ஏழாம் என்று
கூறுவர், விளி ஏற்கும் பெயர்க்கண்ணது ஆகிய விளியொடு கூடாத இடத்து; அதனொடு
கூட எட்டு என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.