சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

138 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘வேற்றுமை உருபுகள் அல்லா தனவும்
வேற்றுமை உருபுகள் போல்வெளிப் படுமே.’
19
 
‘உருபுஏற் றதனையும் உருபையும் உருபு
நோக்கிவந் ததனையும் வேற்றுமை என்பர்.’
 20
 
‘உருபினை ஏற்றசொல் பலபொருள் படுதலும்
உருபுநோக் கியசொல் பலபொருள் படுதலும்
எனஇரு கூறாம் வேற்றுமை என்பர்.”’
21
 
‘பகுபதம் பகாப்பதம் இருவகைத் தொடர்ப்பதம்
வினைமுற் றுப்பெயர் குறிப்புமுற் றுப்பெயர்
தொழிற்பெயர் ஆதியின் தோன்றும்எட் டுருபே.”’
.24
 
‘வேற்றுமைப் படுத்தலின் வேற்றுமை ஆம்இவை
பெயர்ஐ ஆல்குஇன் அதுகண் விளிஎட்டே’.
தொ.வி. 55
 
‘எல்லாப் பெயரும் வேற்றமை ஏற்கும்.’
மு.வீ.பெ.48
 
வேற்றுமை தானே விளியோடு எட்டே. ”
49


அவற்றின் பெயரும் முறையும்

194பெயரே ஐஆல் குஇன் அதுகண்
விளிஎன்று ஆகும் அவற்றின் பெயர்முறை.
 
 

இஃது அவற்றின் பெயரும் முறையும் உணர்த்துகின்றது.

இ-ள்: பெயரும் ஐயும் ஆலும் குவ்வும் இன்னும் அதுவும் கண்ணும் விளியும்
என்று கூறப்படும், அவற்றின் பெயரும் அவற்றின் கிடக்கை முறையும் என்றவாறு.

ஈண்டுக் கூறிய பெயர்களே அன்றி, எழுவாய்- இரண்டாவது- மூன்றாவது-
நான்காவது- ஐந்தாவது- ஆறாவது- ஏழாவது- எட்டாவது என இவை வேறு வேறுபெயர்
கொள்ளுமாறு மேலே கூறுப