சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

14 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

 ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித் தனவே’

‘சொல்லையும் பொருளையும் சொல்லான் உணர்தல்’.


‘ஓர்உரை தொடர்பொது உரைபடும் இருதிணை
ஐம்பால் மூவிடம் அறுவகை வழக்கு
வெளிப்படை குறிப்பின் விளக்குவது உரையே.’

‘ஒருபொருள் பயப்பது ஓர் உரை யாகும்’.

‘பலபொருள் பயப்பது தொடர்சொற் கிளவி’ .

‘இருமையும் பயப்பது பொதுஎன மொழிப’.
மு.வீ.பெ.2

13




5

6

7

8
 

[பொதுமொழியாவது ஒருகால் தனிமொழியாகவும் ஒரு கால் தொடர்மொழியாகவும்
அமைதலேயன்றி, ஒரேநிலையில் தனிமொழியாகவும் தொடர்மொழியாகவும் அமைதல்
இன்மையின் இவ்வாசிரியர் பொதுமொழி என்ற பகுப்பை விடுத்துத்தனிமொழி
தொடர்மொழி என்னும் இரண்டே கொண்டாரென்க.]
 

இருவகை மொழி
 

161தனிமொழி சமய ஆற்றலால் தனித்தும்
தொடர்மொழி அவாய்நிலை தகுதி அண்மையின்
தொகைநிலை தொகாநிலை ஆயிரு வகையால்
தொடர்ந்தும் பொருளைத் தோற்றுவது இயல்பே.
 
 

இது மேற்கூறிய தனிமொழியும் தொடர்மொழியும் பொருள் விளக்குமாறு
கூறுகின்றது.

இ-ள்: தனிமொழி சங்கேத வலியால் தனித்து நின்றும் தொடர்மொழி
அவாய்நிலையானும் தகுதியானும் அண்மையானும் தொகைநிலை வகையானும்
தொகாநிலை வகையானும் தொடர்ந்து நின்றும் பொருளை விளக்குதலை செய்வது
அவற்றிற்கு இலக்கணம் என்றவாறு.