தனிமொழி- பெயர் வினை இடை உரி என்ற தனிச் சொற்கள், சமய ஆற்றல் - சங்கேதவலி ‘சமௌ சமய சங்கேதௌ’ என்பது அமரசிங்கம். சங்கேத ஆற்றலாவது ‘இச்சொல் இப்பொருள் உணர்த்துக’ என்னும் இறைவனுடைய நியமத்தால் உண்டாய சக்தி. சங்கேதம்- நியமம், உடன்பாடு. இனி, ஆற்றலைச் சொல் இயற்கையாக உடையது என்பது பிரயோகவிவேகநூலார் கருத்து. அவர் ‘இனிஆற்றலைச் சொல் இயற்கையாக உள்ளது என்னாது ஈசுரசங்கேதம் எனவும், சமய சங்கேதம் எனவும், நானார்த்த பதங்களையும் சமானார்த்த பதங்களையும், கட்டிய வழக்கு எனவும் சில வடநூலார் கூறுவர். அது பொருந்தாது; வடமொழியில் வழங்கும் இருவகைப்பதமும் ஒருவரால் சொல்லப்படாமல் சுயம்புவாய் நிகழ்கின்ற வேதபுருடன் கண்ணும் வழங்கலின், ஆற்றல் சொல்லியற்கையேயாம் என்க. ‘செய்யா மொழிக்கும் திருவள் ளுவருரைத்த பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே- செய்யா அதற்குரியர் அந்தணரே’ எனச்சங்கத்தாரும் வேதபுருடனைச் சுயம்பு என்பர்” என்றுரைத்தார் (பி.வே.18-உரை) இனி, மழவை மகாலிங்கஐயர் தாம் இயற்றிய பாலபாடத்தில், சொல் சமுதாய ஆற்றலால் பொருள் விளக்குவது’ என்பர். சமுதாய ஆற்றலாவது இச்சொற்கு இப் |