சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

16 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

பொருள் கோடல் வேண்டும் என நன்மக்கள் கூட்டத்தார் தம்மிடை முடிவு செய்த
பொருளைச் சொல் கோடலாம்.

தொடர்மொழியாவது தனி மொழியின் ஈட்டம்; அஃது அவாய்நிலை தகுதி
அண்மைநிலை என்ற மூன்றானும் அமையும் என்று வடநூலாகும், தொகைநிலை
வகையானும் பயனிலை வகையானும் எண்ணுநிலை வகையானும் அமையும் என்று தமிழ்
நூலாரும் கொண்டனர். இக்கருத்துக்களைச் சேனாவரையர்உரை, இறையனார்களவியலுரை,
உரையாசிரியர் உரை, பேராசிரியர்தம் மரபியல் உரை, நச்சினார்க்கினியர் உரை
இவற்றால் உணரலாம்.

அவாய்நிலையாவது தன்னொடு சேர்ந்து தொடர்ப்பொருளை முடித்தற்குரிய
மற்றொரு சொல்லை அவாவி நிற்பதாம். ஆவை என்பது கொணா என்பதனை அவாவி
நிற்றல் அவாய் நிலையாம். தகுதியாவது பொருள் விளங்குவதற்கேற்ற சொற்கள் சேர்ந்து
நிற்றலாம். அது நீரால் என்ற சொல் நனை என்ற சொல்லைச்சேர்ந்து தன்பொருள்
முற்றுப்பெறுமாறு அமைதல் போல்வதாம். நீரால் என்பதற்கு நனை என்ற சொல்
சேர்தலே தகுதியன்றி எரி என்ற சொல் சேர்தல் தக்கது அன்மை காண்க. அண்மை
நிலையாவது தொடராய் நிற்கும் சொற்களை இடையீடின்றிச் சொல்லுதல்; அஃது
ஆற்றங்கரைக்கண் ஐந்துகனிகள் உளவாகின்றன என்பது போல்வது.
 

 

‘தகுதி அவாய்நிலை அண்மைநிலை முறையே
யோக்கியதை ஆகாங் கிசைஆ சத்தி
சந்நிதி மற்றுமா சத்தி யாகும்’



(பி.வே.19உரை)
தகுதியை யோக்கியதை எனவும் அவாய்நிலையை ஆகாஞ்சை எனவும்,
அண்மைநிலையை ஆசத்தி அல்லது சந்நிதி எனவும் வடமொழியில் கூறுவர்.

‘தகுதி அவாய்நிலை அண்மைநிலை மூன்றும்