சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

140 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  தேறிய சத்தம் இவற்றுள்ளும் அத்தம் சிலவுளவே’. (6)
  ‘தேற்றும் தமிழுக்கு எழுவாய் விபத்தி திரிபில்பெயர்’
தோற்றும் பிறஉருபு ஓர்ஆறும் வேற்றுமை தோன்றி நிற்கும்
 
 
  ஆற்றும் கருத்தா கருமம் கரணம் அவதி கொள்வோன்
சாற்றும் தொழிற்குஇடம் என்றுஅறு காரகம் தாம் உளவே’
(7)
 
‘பாழியா வினைசெய் பவன் சுருத் தா; செயப்பட்ட பொருள்
அழியாது நிற்கும் கருமம்; கருவி அருங்கரணம்;
ஒழியாது கொள்பவன் சம்பிர தானம்; மொழிஅவதி
இழிபாம்; அதிகரணந்தான் இடம் என்பர் ஏந்திழையே’
(8)
 
இந்திரன் தாமரை யைக்கரத் தால்கொய்து
இறைவனுக்குத் தந்துஇருங் குற்றத்தின் நீங்கிவிண் மேல்இருந்தான் எனலும் வந்துஅருங் காரகம் எல்லாம் பிறக்கும்ஓர் வாக்கியத்துள் சிந்துர வாள்நுதல் செவ்வாய்க்
குறுநகைத் தேமொழியே
(9)
என்று கூறியனவற்றையும் நோக்குக.

வீரசோழிய நூலாரும் வேற்றுமையும் காரகமும் பற்றி
 
‘எட்டாம் எழுவாய் முதற்பெயர் வேற்றுமை; ஆறுளவாம் கட்டார் கருத்தா முதற்கா ரகம்; அவை கட்டுரைப்பின்
ஒட்டார் கருத்தா கருமம் கரணம்ஒண் கோளியொடும்
சிட்டார் அவதியொடு ஆதாரம் என்றறி தேமொழியே’.
 
வீ.சோ.29
என்று கூறியதும் நோக்குக.
இவ்வேற்றுமை உருபுகள் பற்றி, இலக்கணக்கொத்து,