சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-36,37141

  ‘ஒருவேற் றுமைக்குள்ஓர் உருபே வருதலும்
ஒருவேற் றுமைக்குப் பலஉருபு வருதலும்
எனஇரு கூறாய் வரும்உரு புகளே
ஐகு ஒன்றே அல்லன பலவே’
இ.கொ. 22
 
‘ஓர்உரு பிற்கே பல பொருள் வருதலும்
ஒருபொருட் கேபல உருபுகள் வருதலும்
எனஇரண் டாகும் வேற்றுமை இயல்பே
அவ்விரண்டனையும் முறையே அறைகுவன்.’
இ.கொ 23்
என்று கூறியனவற்றையும் உட்கொள்க.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

  ‘அவைதாம்
பெயர் ஐ ஒடுகு
இன்அது கண்விளி என்னும் ஈற்ற.’
தொல்.சொல். 64
 
‘காண்டகு பேர் ஐஒடுகு இன்அது கண்விளி என்று
ஈண்டுரைப்பின் வேற்றுமை எட்டாகும்’
 
நே.சொல். 16
  முழுதும் - நன்னூல். 292
  ‘இவை, பெயர் ஐ ஆல்குஇன் அதுகண் விளிஎட்டே.’
 
தொ.வி. 55
  ‘பெயர்ஐ ஒடுகு இன்அது கண்விளி.’ மு.வீ.பெ- 60
     
 

ஆறாவது பிற உருபுகளை ஏற்குமாறு
 

 
195 ஆறன் உருபும் ஏற்கும்அவ் வுருபே.
 
 
இஃது எய்தாதது எய்துவிக்கின்றது.
                    இ-ள்: பெயரே அன்றி ஆறன் உருபும் அவ்வுருபுகளை ஏற்கும் என்றவாறு.

வரலாறு: சாத்தனதனை- சாத்தனதனால்- சாத்தனதற்கு- சாத்தனதனின்- சாத்தனதனது-
சாத்தனதன்கண் எனவரும். ஏற்புழிக் கோடலான் எழுவாயும் விளியும் ஒழித்து
ஏனையவே கொள்க.