சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

144 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இ-ள்: நீயிர் என்பதூஉம் நீவிர் என்பதூஉம் நான் என்பதூஉம்
ஆகியமூன்று பெயரும் எழுவாய் வேற்றுமையை ஏற்றலே அன்றி ஏனை
உருபுகளை ஏற்று நில்லா என்றவாறு.
 

விளக்கம்
 

எய்தியது - பெயர் எட்டு வேற்றுமையும் ஏற்கும் என்பது. மறுத்தல்- இம்மூன்றும் எழுவாய்வேற்றுமையாயே நிற்கும் என்பது.
 

ஒத்த நூற்பா: 38.39
 


 
முழுதும் நன்.294, மு.வீ.பெ.52

முதல் வேற்றுமை
 

197 அவற்றுள்
எழுவாய் உருபு திரிபுஇல் பெயரே
வினைபெயர் வினாக்கொளல் அதன்பய னிலையே.
 

இது நிறுத்த முறையானே எழுவாய் வேற்றுமை உருபும் அதன் பயனிலையும்
கூறுகின்றது.

இ-ள்: மேல் கூறிப்போந்த வேற்றுமை எட்டனுள் முதல்வேற்றுமை ஆவது திரிபு
இல்லாத பெயரேயாம். வினையையும் பெயரையும் வினாவையும் கோடல் அதற்குப்
பயனிலையாம் என்றவாறு.

திரிபு இல்லாமையாவது உருபும் விளியும் ஏலாது, ஆ அவன் என்றாற்போல
நிற்றலாம்; ஆகவே எழுவாய் வேற்றுமை உருபாவது பெயர்ச்சொல் மூவகைப்பட்ட
பயனிலையும் தன்கண் தோன்ற நிற்கும் என்பது ஆயிற்று. முடிக்கும் சொற்பொருள்
அத்தொடர்மொழிக்குப் பொருள்நிலை ஆதலின் பயனிலை என்றார். ‘வினை’ எனவே,
வினையும் வினைக் குறிப்பும் தழுவுதலான்,