சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-39145


 
பொருண்மை சுட்டல் வியங்கோள் வருதல்
வினைநிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல்
பண்புகொள வருதல் பெயர்கொள வருதல் என்று
அன்றி அனைத்தும் பெயர்ப்பய னிலையே.
 
தொல்.சொல். 66
என்ற ஆறும் இவரும் நேர்ந்தார் என்பதாம்.
 

 
‘வினைநிலை உரைத்தலும் வினாவிற்கு ஏற்றலும்
பெயர்கொள வருதலும் பெயர்ப்பாய னிலையே’
 

என்ற ஆசிரியர் அகத்தியனாருக்கும் இதுவே உடன்பாடு என்க.

பொருண்மை சுட்டல் - ஆ உண்டு எனப் பண்புமுதலாயின சுட்டாது உண்மையே
சுட்டலாம்;

வியங்கோள் வருதல் - ஆ செல்க எனத் தன்ஏவலைக் கொள்ள வருதலாம்;

வினைநிலை உரைத்தல் - ஆ கிடந்தது எனத் தன்வினை நிலையைச் சொல்ல
வருதலாம்;

பண்பு கொள வருதல் - ஆகரிது என வருதலாம்; வினைக்குறிப்பு ஆதல்
ஒப்புமையான், ஆ இல்லை - ஆ அல்ல என்னும் தொடக்கத்துக் குணப்பொருள அல்லா
வினைக்குறிப்பொடு தொடர்தலும் கொள்க. இவை எல்லாம் வினைப்பாற்பட்டன.

வினாவிற்கு ஏற்றல்-அஃது யாது. அஃது எவன் என வினாச் சொல்லொடு
தொடர்தலாம்;

பெயர்கொள வருதல்- ஆ ஆயிரம், ஆ ஆம்பல், ஆ வெள்ளம் என
முடிக்கப்படும் சொல் ஆகாது முடிக்கும் சொல்லாயே வருதலாம்.
பிறவும் அன்ன.